Coconut Oil Ose For White Hair
நரை முடியை மறைப்பதற்காக தொடர்ந்து ஹேர் டை பயன்படுத்துவது நல்லதல்ல. இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்ற முயற்சிக்க வேண்டும். அப்படி நீங்கள் நரை முடியை மறைப்பதற்கு இயற்கையான வழியை தேடி இந்த பதிவை படிக்கிறீர்கள் என்றால் சரியான பதிவைதான் படிக்கிறீர்கள். ஆமாங்க இந்த பதிவில் தேங்காய் எண்ணெயை வைத்து முடிய வளர்ச்சியை அதிகப்படுத்தவும், நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கும் தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை கலந்து தேய்த்தால் போதுமா.! அது என்ன பொருள் என்று யோசித்து கொண்டே படியுங்கள். தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் நடக்கும், அதனுடன் கலந்து தேய்க்கும் பொருளை தேய்த்தால் என்ன நன்மைகள் நடக்கும் என்று தெரிந்து கொண்டு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாமா.! இல்லை பயன்படுத்த வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளவும்,
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முடி வளர்ச்சிக்கும், நரைமுடிக்கும் தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், இரும்பு மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும், நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கும், தலை பொடுகு, முடி உதிர்தல் மற்றும் வறண்ட போன்ற முடி தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடியை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. மேலும் அதன் ஒமேகா அமிலங்கள் மற்றும் மெலனின் உற்பத்தியின் காரணமாக முடியை கருமையாக்குகிறது.தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய் தூள் சேர்த்து கலந்து தேய்த்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.
அதற்கு அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் 50 ஊற்றி அதில் நெல்லிக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலைக்கு ஷாம்பு போட்டு தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரவும்.
தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் பாத வெடிப்பை சரி செய்யலாம்
நரை முடி வரமால் தடுக்க:
நரை முடி வந்ததும் அதனை முயற்சிப்பதை விட அதனை வருவதற்கு முன்னே தடுக்க முயற்சிக்க வேண்டும். இந்த பேக்கை பயன்படுத்துவதால் நரை முடி வருவதை தாமதப்படுத்தும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டும் சேர்ந்தால் நரை முடியை தாமதப்படுத்த உதவுகிறது. எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன , அவை ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன.உங்கள் முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் எலும்பிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்பளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இதனை வாரத்திற்கு ஒரு செய்து வந்தால் நரை முடி வருவதை தடுக்கும்.
இந்த ஒரு பொருள் இருந்தால் 5 நிமிடத்தில் நரை முடியை கருப்பாக மாற்றலாம்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |