இயற்கையான முறையில் முடி வளர்ப்பது எப்படி? | Natural Beauty Tips For Hair in Tamil
பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். இப்பொழுது பெண்கள் மட்டும் இன்றி ஆண்களும் முடி வளர்க்க ஆரம்பித்து விட்டனர். தலைமுடியை வளர்க்க நினைக்கும் பல பேர் கடைகளில் விற்கும் இரசாயனம் கலந்த பொருட்களை தடவி வருகின்றனர். இதனால் நன்றாக இருக்கும் முடி கூட சீக்கிரம் உடையவும், கொட்டவும் ஆரம்பித்து விடுகிறது. நாம் இந்த பதிவில் இயற்கையான முறையில் முடியை எப்படி வளர்க்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
டிப்ஸ்: 1
- Hair Fall Treatment in Tamil: தலையை வாஷ் பண்ணும் போது சுடு தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். சுடு தண்ணீரில் குளிக்கும் போது முடி அதிகமாக கொட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை முடியை குளிர்ந்த நீரினால் அலசுவது நல்லது.
டிப்ஸ்: 2
- Natural Beauty Tips For Hair: தலைக்கு ஷாம்பூ-வை அப்படியே பயன்படுத்தாமல், தண்ணீருடன் கலந்து ஷாம்பூ-வை பயன்படுத்துவது நல்லது. ஷாம்பூவில் அதிக இரசாயன பொருட்கள் இருப்பதால் இவை முடி உடைவதற்கு காரணமாக இருக்கும்.
டிப்ஸ்: 3
- Hair Care Routine in Tamil: வெளியில் செல்லும் போது தலையை ஒரு காட்டன் துணியை வைத்து கவர் பண்ணி கொள்வது நல்லது. வெளிபுறத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் தூசிகளால் முடி சேதமடைய வாய்ப்புள்ளது.
டிப்ஸ்: 4
- Hair Care Routine For Hair Growth in Tamil: Dry ஹேராக இருக்கும் போது முடியை அலசுவது நல்லதல்ல. தலைக்கு குளிக்க போவதற்கு முன்னர் எண்ணெய் தடவி ஒரு 8 மணி நேரம் வைத்து பின்னர் தலை குளிப்பது நல்லது.
டிப்ஸ்: 5
- Mudi Valara Tips in Tamil: முடியை அலசியவுடன் கடினமான துணியை வைத்து துவட்டாமல், மெல்லிய காட்டன் துணியை வைத்து பொறுமையாக துவட்ட வேண்டும். ஏனெனில் ஈரமாக இருக்கும் முடி மிகவும் வலு இழந்து இருக்கும், நீங்கள் வேகமாக துவட்டும் போது அதிக முடி கொட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
டிப்ஸ்: 6
- Hair Care Routine in Tamil: வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் தலையை வாஷ் செய்தால் போதும். அடிக்கடி தலையை வாஷ் செய்தால் முடியின் தன்மை இழந்து விடும், முடியும் வளர ஆரம்பிக்காது.
டிப்ஸ்: 7 தேவையான பொருட்கள்:
- வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 30 ml
- Castor Oil – 20 ml
செய்முறை:
- Hair Care Routine in Tamil: முதலில் 3 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயம் எடுத்து அதனை பவுடர் போல அரைத்து கொள்ளவும். பின் ஒரு பௌலில் 30 Ml தேங்காய் எண்ணெய், 20 ml Castor Oil மற்றும் அரைத்து வைத்த வெந்தய பொடி 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும்.
- பின் அதை டபுள் பாய்லிங் முறையில் வைத்து சூடாக்கவும். சூடான பிறகு இதை 1 மணி நேரம் ஆற வைத்து பின்னர் தலையின் வேர்ப்பகுதியில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து தலையை அலசி விடவும்.
- உடல் சூட்டை தனித்து முடி வளர்ச்சியை அதிகரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
கூந்தல் பராமரிப்பு முறை |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |