How to Make Natural Black Hair Dye At Home in Tamil
பொதுவாக இப்போது ஆண்கள் முதல் பெண்கள் வரை நரை முடி பிரச்சனை வந்துகொண்டு தான் இருக்கும். இந்த நரை முடி வருவதற்கு முக்கிய காரணம் நாம் தான். இந்த நரை முடியானது சத்து குறைபாடுகள், நீர் சத்துக்கள் இல்லாமல் இருந்தாலும் ஏற்படும். அதேபோல் நம்முடைய அம்மா, அப்பா இருவரில் யாருக்காவது நரை முடி பிரச்சனை இருந்தால் அவர்களை போலவே நமக்கும் இந்த நரை முடி பிரச்சனை வரும்.
இந்த நரையை முடியை குறைப்பது என்பது மிகவும் எளிமையான விஷயம். அதேபோல் கடையில் விற்கும் செயற்கை ஹேர் டை பயன்படுத்துவது, இப்போது நல்ல ரிசல்ட்டை கொடுக்கும் என்றாலும் பிற்காலத்தில் இந்த நரை பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கும். அதேபோல் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இயற்கையான ஹேர் டை தான் நமக்கு எப்போதும் நன்மை பயக்கும். சரி வாங்க வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Natural Black Hair Dye At Home in Tamil:
கருஞ்சீரகம்: கருஞ்சீரகம் நிறைய மருத்துவத்திற்கும் நோய்களுக்கும் மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல், பித்தப்பை மற்றும் சிறுநீரக கல் கரைய, சளி இருமல் குணமாக, தோல் நோய் குணமாக, உடல் எடையை குறைக்க , மாதவிடாய் பிரச்சனை குணமாக என நிறைய பிரச்சனைக்கு மருந்தாக உள்ளது. மேலும் இந்த இளநரை முடிக்கு மருந்தாகவும் உள்ளது.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் தான் முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது ஆகும். ஆகவே இந்த தேங்காய் எண்ணெய் இல்லாமல் எப்படி நரை முடியை கருப்பாக மாற்றுவது. ஆகவே உங்கள் முடிக்கு தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு டீ தூள் எடுத்துக்கொள்ளவும்.
தையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் நரைமுடி கருமையாக இந்த இரண்டு பொருள் போதும்..
செய்முறை:
முதலில் உங்கள் முடிக்கு தேவையான அளவு டீ தூள் எடுத்துக்கொள்ளவும். அடுத்து கருஞ்சீரகம் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் இந்த கருஞ்சீரகம், டீ தூள் சேர்த்துக் கொள்ளவும். அதனை நன்கு கருமையாக மாறும் வரை வறுத்து எடுத்துகொள்ளவும்.
அடுத்து அதனை ஒரு மிக்சி ஜாரை மாற்றிக் கொள்ளவும். அதில் இந்த இரண்டு பொருளையும் சேர்த்து பொடி போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த பொடியை எடுத்துக் கொள்ளவும். அதாவது உங்கள் முடிக்கு தேவையான அளவு எண்ணெயை எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இந்த பொடியையும் எண்ணெயும் சேர்த்து கலந்து கொள்ளவும். அது ஒரு பேஸ்ட் போல் மாறி வரும். அப்போது அதனை எடுத்து உங்கள் முடியின் எங்கு இள நரை உள்ளதோ அங்கு மட்டும் பிரஸ் வைத்து தடவிக்கொள்ளவும்.
அவ்வளவு தான் இதனை அப்ளை செய்து தலையை சீப்பு போட்டு சீவிக் கொள்ளவும். அல்லது இதை அப்ளை செய்து காய்ந்த பின் குளித்தும் கொள்ளலாம். அவ்வளவு தான் உங்கள் முடி கருமையாக மாறிவிடும். இதனை தொடர்ந்து மூன்று மாதம் செய்து வந்தால் உங்கள் முடி கருமையாக மாறி விடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |