பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும்! பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும்?
தை திருநாள் அன்று அனைவரின் வீடும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்..! அதேபோல் வீடே புகை மண்டமாக இருக்கும். ஏனென்றால் வீட்டில் உள்பக்கம் தான் சிலர் வீட்டில் பொங்கல் வைப்பார்கள் அதனால் அடுப்பு எறிவது புகை மூட்டமாக இருக்கும். அதிலும் சிலர் பானையை ஊற்று கவனித்து கொண்டு இருப்பார்கள். எந்த பொங்கல் முதலில் பொங்கவேண்டும், அது எந்த திசையில் பொங்குகிறது என்று கவனித்துக்கொண்டு இருப்பார்கள், சிலருக்கு இப்படி ஒரு சாத்திரம் உள்ளது என்று தெரியாது. இந்த வருடம் பொங்கல் வைத்தால் அதனை கவனித்து என்ன பொங்கல் என்ன பலன் என்று தெரிந்துகொள்ளுங்கள்..!
பொங்கல் அன்று இந்த மூன்று பொருட்களை வாங்கி விடுங்கள் அது உங்கள் வீட்டில் பண வரவை அதிகரிக்கும்..!
எந்த பொங்கல் முதலில் பொங்க வேண்டும்:
பொதுவாக பொங்கல் வைக்க பானையை அலகாரம் செய்து, அதற்கு பூ போட்டு வைத்து இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி, மஞ்சள், குங்குமம் வைத்து பானையை அலகாரம் செய்து. அடுப்பில் பானையை வைத்து அதில் சூடம் ஏற்றி அடுப்பை பற்றவைத்து பொங்கல் பொங்க ஆரம்பித்து விடுவார்கள்
அதில் முதலில் பால் தான் ஊர்வார்கள் அந்த பால் முதலில் எந்த திசையில் பொங்குகிறதோ அதற்கு ஏற்றது போல் பலன் இருக்கும்..!
அனைவரும் சொல்வார்கள் சர்க்கரை பொங்கல் பொங்கினால் நல்லது என்று ஆனால் இது முற்றிலும் தவறு இரண்டு பொங்களில் எது பொங்கினாலும் நன்மை தான். ஆகவே அதனை நினைத்து யாரும் பயம்கொள்ளவேண்டும்.பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நல்லது:
வடக்கு திசையை பார்த்து இரண்டு பொங்களின் எது பொங்கினாலும் பணவரவு உண்டாகும். தெற்கு திசையை பார்த்து பொங்கல் பொங்கினால் செலவுகள் அதிகரிக்கும். கிழக்கு திசையை பார்த்து பொங்கல் பொங்கினால் நல்ல சுபகாரியம் இனிதே தொடங்கும். மேற்கு திசையை பார்த்து பொங்கல் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.தைப் பொங்கல் அன்று மறக்காமல் நாம் செய்ய வேண்டியவை என்ன தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |