ஆமணக்கு எண்ணெய் பயன்கள் – Castor Oil Health Benefits in Tamil
Castor Oil Health Benefits in Tamil – ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய்யில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி தான் நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். ஆமணக்கு எண்ணெய் என்பது ஆமணக்கு செடியின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் அடர்த்தியான, மணமற்ற எண்ணெய். அதன் பயன்பாடு பண்டைய எகிப்துக்கு முந்தையது, அங்கு இது முதலில் விளக்கு எரிபொருளாகவும் பின்னர் மருத்துவ மற்றும் அழகு சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டது. சரி வாங்க இந்த ஆமணக்கு எண்ணெய் எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த தீர்வினை தருகிறது, இவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளது, யாரெல்லாம் இந்த விளக்கெண்ணெயை பயன்படுத்த கூடாது போன்ற விஷயங்களை பற்றி அறியலாம் வாங்க.
விளக்கெண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
ஒரு டேபிள்ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயில் பின்வருவன அடங்கும்:
- கலோரிகள்: 120
- புரதம்: 0 கிராம்
- கொழுப்பு: 14 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள்: 0 கிராம்
- ஃபைபர்: 0 கிராம்
- சர்க்கரை: 0 கிராம்
மேலும் இந்த விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
விளக்கெண்ணெய் பயன்கள் – Castor Oil Health Benefits in Tamil:
கண்களுக்கு:
விளக்கெண்ணெயில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளது. குறிப்பாக இந்த விளக்கெண்ணெய் கண்களுக்கு அதிக நன்மை அளிக்கக்கூடியது. அதாவது கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய தன்மை இந்த எண்ணெய்க்கு உள்ளது. ஆக விளக்கெண்ணெயை இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு சொட்டு விளக்கெண்ணையை கண்களில் விட்டு உறங்கவும். இவ்வாறு செய்வதினால் கண்களில் வறட்சி ஏற்படாது, கண் இமைகளில் உள்ள முடிகளும் வலுவாகும். கண்களில் எந்தவிதமான நோய் தொற்றுகளும் ஏற்படாது. மேலும் கண்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றி கண்களை தெளிவாக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.
மேலும் கண்களில் கட்டி, எரிச்சல், வீக்கம், அரிப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும் விளக்கெண்ணெயை கண்களில் பயன்படுத்தலாம். கண்களில் கருவளையம் உள்ளவர்கள் இந்த விளக்கெண்ணெயை உங்கள் கண்களில் தடவி வருவதன் மூலம் கண்களில் உள்ள கருவளையம் கூடிய விரைவில் மறைய ஆரம்பிக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தேங்காய் எண்ணெய் நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனைக்கு:
இந்த எண்ணெய் வயிற்று குடல் பகுதியில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தமான விளக்கெண்ணெயை ஒரு ஸ்பூன் பருகி வந்தால் குடலில் உள்ள கழிவுகள் வெளியாகி குடல் சுத்தம் ஆகும்.
காயங்கள் சீக்கிரம் குணமாக:
அதாவது இந்த விளக்கெண்ணெயை காயங்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து வந்தால் அந்த காயத்திற்கு இந்த விளக்கெண்ணெய் ஈரப்பதத்தை கொடுக்கும். இதன் மூலமாக காயங்கள் சீக்கிரம் ஆரத்தொடங்கும்.
சரும பிரச்சனைக்கு:
பொதுவாக சிலருக்கு சருமத்தில் பிரச்சனைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் இந்த ஆமணக்கு எண்ணெயை தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன் முகத்தில் நன்றாக அப்ளை செய்துவிட்டு உறங்கவும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம் சரும பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
நகம் வளர:
சிலர் நகம் வளர்க்க ஆசைப்படுவார்கள் இருப்பினும் அவர்களுக்கு நகம் வளராது, அப்படி வளர்ந்தாலும் உடனே உடைந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன் நகத்தில் விளக்கெண்ணெயை வைத்துக்கொண்டு உறங்குங்கள். இவ்வாறு செய்வதினால் நன்கு வலுவாக வளர ஆரம்பிக்கும்.
புருவம் அடர்த்தியாக வளர:
சிலருக்கு புறம் அடர்த்தியாக இருக்காது, அவர்கள் தினமும் இரவு உறங்குவதற்கு முன் புருவத்தில் விளக்கெண்ணெயை அப்ளை செய்து வந்தால் கூடிய விரைவில் புருவம் முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
கருப்பை சுருக்கம்:
ஆமணக்கு எண்ணெய் கருப்பை சுருக்கத்திற்கு சிறந்த மருந்தாக உதவுகிறது. கருப்பை சுருக்கம் உள்ள பெண்கள் கருப்பையை விரிவுபடுத்த பயன்படுத்தலாம் குறிப்பாக நிறைமாத கர்ப்பிணிகள் தங்களது வயிறு மற்றும் அடிவயிற்றில் தடவி லேசாக மசாஜ் செய்து வந்தால் கருப்பைக்கு இரத்த ஓட்டம் அதிகம் ஆகும். மேலும் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய உதவி செய்யும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்பையும் சரி செய்யும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..!
மூட்டுவலி:
மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம். இது நல்லதொரு நிவாரணத்தை கொடுக்கும்.
தூக்கமின்மை:
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் இரவில் தூக்கம் இன்றி மிகவும் அவதிப்படுகின்றன. அவர்களுக்கு சிறந்த தீர்வினை இந்த ஆமணக்கு எண்ணெய் தருகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன் விளக்கெண்ணெயை சிறிதளவு எடுத்து மிதமாக சூடுபடுத்தி உள்ளங்களில் தடவி மசாஜ் செய்து வருவதன் மூலம் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
உடல் சூடு குறைய:
பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் சூடு. இந்த உடல் சூட்டை குறைக்க விளக்கெண்ணெய் இரவு உறங்குவதற்கு முன் உங்கள் தொப்புளில் ஒரு சொட்டுவிட்டு உறங்கவும், இவ்வாறு தினமும் செய்து வர உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
முடி வளர:
முடி வளர்ச்சியை அதிகரிக்க 100 மில்லி விளக்கெண்ணெய்யுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையின் ஜெல் ஆகியவரை கலந்து லேசாக சூடு செய்து கொள்ளவும். பிறகு இந்த எண்ணெயை தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு தலை அலசவும். இவ்வாறு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வர முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |