30 Days Hair Growth Challenge in Tamil
இன்றைய காலத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவு முறையின் காரணமாக பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடி உதிர்ந்து அந்த இடத்தில் புதிய முடி வளராமல் வழுக்கையாக மாறிவிடும். அப்படி வழுக்கையாக உள்ள இடத்தில் புதிய முடியை வளர வைக்க நீங்களும் பல முயற்சிகளை கையாண்டிருப்பீர்கள். அவையாவும் நல்ல பலனை அளித்ததா என்றால் உங்களின் பதில் இல்லை என்று தான் இருக்கும்.
ஆனால் இன்றைய பதிவில் கூறியுள்ள சில குறிப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் 30 நாட்களில் வழுக்கையாக உள்ள இடத்திலும் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம். அதனால் இத பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் சொல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Hair Growth Challenge in 1 Month in Tamil:
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் தலைமுடி உதிர்வது மற்றும் உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளராமல் போவது தான். இதனை போக்குவதற்கான சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- நெல்லிக்காய் – 10
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி அளவு
- தேங்காய் எண்ணெய் – 500 மி.லி
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 10 நெல்லிக்காய்களையும் அதில் உள்ள விதையினை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஒரே வாரத்தில் உங்களின் முடி உதிர்வை நிறுத்தி புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..!
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 500 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனுடனே நாம் நறுக்கி வைத்துள்ள 10 நெல்லிக்காய் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 1 கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை அடுப்பிலிருந்து இறக்கி நன்கு குளிர விடுங்கள். பிறகு அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். இதனை தினமும் தலையில் தடவி வருவதன் மூலம் 30 நாட்களில் உங்களின் தலையில் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.
How to Grow Hair Faster in a Month in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- ஆளி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 2 டீஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 கப்
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகள், 2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து உங்களின் தலையில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் 30 நாட்களில் உங்களின் தலையில் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=>உங்கள் தலைமுடியை எப்பொழுதும் மிருதுவாக வைத்திருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |