திரெட்டிங் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்..! Threading Problems..!
Facial Threading Side Effects: வணக்கம் தோழிகளே..! இன்றைய பதிவில் பெண்கள் திரெட்டிங் செய்வதால் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இப்போது உள்ள காலங்களில் திரெட்டிங் செய்து கொள்ளாத பெண்களே இல்லை. பெண்கள் முக அழகிற்காக திரெட்டிங் என்ற பெயரில் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தினை குறைத்து கொண்டு இருக்கிறார்கள். நம் உடலில் இருக்கும் புருவமானது பிராணன் இயங்கி வரும் இடம் என்று கூறுகிறார்கள். சரி வாங்க தோழிகளே இப்போது புருவ முடி எடுப்பதால் (eyebrow threading in tamil) பின் விளைவுகள் என்னென்ன உள்ளது என்று விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்.
பிராணன் இயங்கும் இடமான புருவம்:
பிராணன் இயங்கி வரும் இடமான புருவ முடிகள் நம்முடைய இறப்பு காலம் நெருங்கி வரும் நிலையில் புருவத்தின் முடிகளை கையில் தொட்டாலே வந்துவிடும். உடலில் உள்ள ப்ராணன்கள் குறைந்து போவதாலே புருவ முடிகள் அனைத்தும் உதிர்ந்து போய் விடுகின்றன.
புருவம் எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் | side effects of threading:
பெண்கள் பார்லர் அல்லது வீட்டிலோ புருவம் எடுக்கின்ற போது கண்களை சுற்றியுள்ள வர்ம பகுதிகளான நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் என்று சொல்லக்கூடிய பொட்டுவர்மம்(அ) சுடரொளியின் காலம், மின் வெட்டி வர்மம், மந்திர காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் உள்ளது.
புருவம் திருத்தம் செய்யும் போது கண்களை சுற்றியுள்ள வர்ம பகுதிகள் பெரிதும் பாதிப்பு அடைகின்றன. அழகு நிலையத்தில் உள்ள புருவம் திருத்தும் பெண்களுக்கு இது போன்ற வர்மங்கள் புருவத்தில் இருப்பது தெரிகிறது இல்லை.
threading side effects – உடல் பாதிப்புகள்:
இதனால் பெண்கள் உடலில் பிராண சக்திகள் குறைய தொடங்குகிறது. இந்த பிராண குறைவின் காரணமாக ஆயுட்காலம் குறைந்து, பிராண சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை பெற வாய்ப்புள்ளது.
புருவம் எடுப்பதால் ஆயுள் காலம் மட்டும் குறைவதோடு இல்லாமல் உடலில் பல நோய்கள் வரவும் காரணமாக இருக்கிறது.
விளைவுகள்:

புருவ முடிகளை சிதைப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியாது. இதனால் வர்ம பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியினை எந்த விதத்திலும் நாம் சிதைப்பது மிகவும் தவறான செயலாகும்.
மேலும் நம் உடலின் மிக முக்கிய சக்தி பாதைகள் கண்களுக்கு அருகில் உள்ளன. அதனால் இந்த பகுதிகளில் கை வைப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கினை தேடி செல்வது போன்று இருக்கும்.
உயிர் பாதுகாப்பு:
இறைவன் உறைவிடம் ஆகும் இடமானது புருவ மத்தியில் தான். இதனை பெண்கள் அனைவரும் உணர்ந்து நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் கடைகளில் புருவம் எடுப்பதை தவிர்த்துவிட்டு கண்களிலும், கண் புருவத்திலும் சுத்தமான விளக்கெண்ணையினை இட்டு வர வேண்டும்.
இதனால் ஆயுட்காலம் நீடித்து, உடலுக்கு நல்ல பிராணன் கிடைத்து, உடல் நல்ல ஆரோக்கியமும், குழந்தையின் வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பீர்கள்.
| இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |














