Pure Natural Hair Oil in Tamil
நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால் தலை முடி பிரச்சனை தான்..! இதற்கு நாமும் வெவ்வேறு எண்ணெய்களை தடவி பார்த்திருப்போம். அதேபோல் நிறைய ஷாம்பு பயன்படுத்திருப்போம். ஆனால் அது எதிலும் நமக்கு ரிசல்ட் கிடையவில்லை. இருந்தாலும் தலைமுடி பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று ஒரே கேள்வியாக உள்ளது. சரி உங்கள் தலை முடி பிரச்சனை அனைத்திற்கும் அருமையான தீர்வு.
அதேபோல் எப்போதும் ஹேர் பேக் போட்டு உங்களின் முடிகளை கெடுத்துக் கொள்வீர்கள். உங்கள் முடியை எப்படி தான் பாதுகாக்க வேண்டும், அல்லது தலை முடிக்கு என்ன எண்ணெய் அப்ளை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Pure Natural Hair Oil in Tamil:
வேம்பாளம் பட்டை: இது மரத்திலிருந்து கிடைக்கக் கூடியது. இந்த பட்டையானது எண்ணெய்க்கு மட்டும் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதேபோல் இது நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. ஆகவே இதை எண்ணெயில் சேர்த்து தடவினால் அவ்வளவு நன்மையை அளிக்கிறது. மேலும் இது முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்வதற்கு நன்மை அளிக்கிறது.
சடாமாஞ்சி: இதுவும் ஒரு வகையான வேர் தான். இது முடி வளர்ச்சிக்கும், அடர்த்தியாகவும் வளர பெரிய உதவி செய்கிறது.
வெட்டிவேர்: இதனை நாம் எண்ணெயில் சேர்த்து தடவினால் அவ்வளவு நன்மை அளிக்கிறது. அதேபோல் இது முடியில் உள்ள பொடுகு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக இருக்கும். இது வெயில் காலத்தில் வரக்கூடிய சூட்டை குறைக்கும்.
நெல்லிக்காய்: இதை எதனால் எடுத்துக்கொள்கிறோம் என்றால், முடியை வேரிலிருந்து வளர உதவி செய்யும். முடியை நன்கு வலிமையாக வைக்க உதவி செய்யும். நெல்லிக்காய் காயவைத்து அதை வற்றலாக எடுத்து கொள்ளவும். இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
அக்குள் கருமை, கழுத்து கருமை, தொடை கருமை அத்தனையும் அதிரடியா வெள்ளையாக இது போதும்..!
செய்முறை:
முதலில் உங்களுக்கு எவ்வளவு எண்ணெய் தேவையோ அதனை ஒரு கடாயில் போட்டு கொதிக்க விடவும். இதனை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். மிகவும் சூடாக வைக்க வேண்டாம். 5 நிமிடம் அப்படியே விட்டு எண்ணெயில் நுரை வரும் அப்போது எண்ணெயை அடுப்பை விட்டு இறக்கி விடவும். இப்போது எண்ணெயில் உள்ள சூட்டை ஆறவிடவும்.
அடுத்து அதனை பாட்டிலில் எடுத்துக் கொள்ளவும். அதன் பின் நாம் எடுத்து வைத்துள்ள நெல்லிக்காயை சடாமாஞ்சி, வேம்பாளம் பட்டை, நெல்லிக்காய், வெட்டிவேர் அனைத்தையும் சேர்த்து ஊறவிடவும். குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் ஊறவிட வேண்டும். அப்போது தான் வேம்பாளம் பட்டை சேர்ப்பதால் எண்ணெய் நிறம் மாறிவிடும். பார்பதற்க்கு சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.
தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |