ஒரு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இதை செய்தால் புதுமுடி வளர Help பண்ணும்..!

hair growth and thickness home remedies in tamil

முடி உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் | Hair Growth and Thickness Home Remedies in Tamil

என்ன செய்தாலும் முடி வளரவில்லை என்று பெரும் கவலையில் இருப்பீர்கள்..! முதலில் முடி ஏன் கொட்டுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அல்லது அதனை இயற்கையாக எப்படி நிறுத்துவது என்று தெரியுமா? இயற்கையாக எப்படி நிறுத்தவது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வீர்கள்..! அதற்கு முன் தலை முடி ஏன் உடைந்து விடுகிறது, நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி ஏன் கொட்டுகிறது..?

பொதுவாக நம் உடலில் தேவையான அளவு சத்துக்கள் இருக்க வேண்டும். அதில் தலைமுடிக்கு என்று சத்துக்கள் நிறைய உள்ளது. அதில் ஒன்று குறைத்தாலும் முடியின் வலிமை குறைந்து விடுகிறது. அப்போது தான் தலை முடி உடைந்து முடி கொட்டுவதற்கு ஆரம்பம் ஆகும்.

மேலும் நாம் செய்யும் சில தவறுகளால் முடிகள் கொட்டும். அதில் முக்கியமான ஒன்று முடியில் எண்ணெய் இல்லாத போது நேராகவே தலையில் ஷாம்பை போட்டு குளிப்பது. அதேபோல் ஹேர் பேக் போடும் போதும் எண்ணெய் இல்லாமல் அப்ளை செய்வது என நிறைய தவறுகளை செய்வதால் தலை முடி கொட்டுகிறது. சரி இதனை இயற்கையாக சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்  வாங்க..!

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Hair Growth and Thickness Home Remedies in Tamil:

தேவையான பொருட்கள்:

  • செம்பருத்தி இலை – 20 
  • தேங்காய் – 1
  • பழைய சாதம் – 1 கப்

செய்முறை:

Hair Growth and Thickness Home Remedies in Tamil

முதலில் மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் நாம் செம்பருத்தி, தேங்காய் துருவல் இரண்டையும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அரைத்துக் கொள்ளவும். பேஸ்ட் போல் அரைத்தால் வடிகட்டுவதற்கு மிகவும் ஈசியாக இருக்கும்.

இப்போது அரைத்த சாறை மட்டும் தனியாக கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனை ஒரு காட்டன் துணியை வைத்து சாறை வடிகட்டிக் கொள்ளவும்.

Hair Growth and Thickness Home Remedies in Tamil

அடுத்து மிக்சி ஜாரை எடுத்து பழைய சாதத்தை சேர்த்து, பின் அதனுடன் நாம் வடிகட்டி வைத்த சாறையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஹேர் பேக் ரெடி ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..! 

பயன்படுத்தும் முறை:

எப்போதும் ஹேர் பேக் பயன்படுத்தும் போது தலையில் முதல் நாள் இரவே எண்ணெய் தடவிக் கொள்ளவும். மறு நாள் காலையில் ஹேர் பேக் பயன்படுத்தும் போது அதனை அப்ளை செய்து ஷாம்பு அல்லது சீயக்காய் தடவி குளிக்கவும். அவ்வளவு தான் இதனை தொடர்ந்து வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்..!

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉 இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! உங்க முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே இரவில் மாயமாய் மறைந்துவிடும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil