Hair Growth Oil At Homemade
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்குமே முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பெண்கள் அனைவருக்குமே முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பெண்களுக்கு முடி ஓரளவு அடர்த்தியாக இருக்கும். இருந்தாலும் அது போதாது.
இன்னும் முடி நீளமாக அடர்த்தியாக வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கக்கூடிய இரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் ஓரளவு இருக்கின்ற முடியும் எலி வால் போல் மாறிவிடுகின்றது. அதனால் முடி அடர்த்தியாகவும் நீளமாக வளர்வதற்கு வீட்டில் இருக்கும் இந்த 2 பொருள் மட்டும் போதும். வாங்க நண்பர்களே இந்த எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Hair Growth Oil At Home in Tamil:
- வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
- கருஞ்சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – 100 ml
- ஆமணக்கு எண்ணெய் – 50 ml
வெந்தயம் எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் போட்டு அதை தூளாக அரைத்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்தது கொள்ள வேண்டும்.
பின் அதே மிக்சி ஜாரில் கருஞ்சீரகம் 3 டேபிள் ஸ்பூன் போட்டு அதையும் தூளாக அரைத்து வெந்தயத் தூளுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.
3 வாரம் இந்த எண்ணெயை தடவினால் முடி கொட்டுவது, பொடுகு தொல்லை இன்னும் நிறைய பிரச்சனைக்கு மருந்து இது தான்..! |
எண்ணெய் தயாரிக்கும் முறை:
பின் அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து கொள்ளவும். அடுப்பை குறைத்து வைத்து கடாயில் 100 ml அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதனுடன் 50 ml ஆமணக்கு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.
எண்ணெய் கொஞ்சம் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரக தூளை போட வேண்டும்.
எண்ணெய் நன்கு பொங்கி வரும். 20 நிமிடம் அடுப்பை குறைத்து வைத்து எண்ணெயை கொதிக்கவிட வேண்டும். எண்ணெய் கொதிப்பது அடங்கியதும் அதில் இறக்கி ஆறவிட வேண்டும்.
எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வழுக்கையாக உள்ள இடத்திலேயும் புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க போதும்..!
இந்த எண்ணெய்யை தலை குளிக்க செல்வதற்கு முன் தலையில் அப்ளை செய்து நன்றாக தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். பின் 2 மணி நேரம் அப்படியே இருக்கட்டும். 2 மணிநேரம் கழித்து நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.
இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். வெந்தயத்தில் இருக்கும் சத்துகள் முடியை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. பொடுகு வராமல் தடுக்கிறது. கருஞ்சீரகம் முடியை கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது.இதுபோல செய்து பாருங்கள் அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்..!
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 ஒரே வாரத்தில் உங்கள் முடி அசுரவளர்ச்சி அடைய இந்த மூன்று டிப்ஸை மற்றும் பாலோ பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |