2 மடங்கு முடி வளர்ச்சிக்கு இதை மட்டும் Follow பண்ணுங்க..!

Advertisement

Maintain Hair Growth

முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக பல குறிப்புகளை பயன்படுத்துகின்றோம். நீங்கள் பயன்படுத்தும் குறிப்புகள் அனைத்தையுமே சிறிது நாட்களுக்கு பயன்படுத்திவிட்டு ரிசல்ட் கிடைக்கவில்லை என்றால் உடனே நிறுத்தி விடுவீர்கள். எந்த குறிப்பையும் பயன்படுத்திய உடனே அதற்கான ரிசல்ட் கிடைக்காது. அதற்கென்று குறிப்பிட்ட நாள் இருக்கும். அது வரைக்கும் குறிப்புகளை Follow பண்ணுவது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் 2 மடங்கு முடி வளர்ச்சியை அதிகப்படுத்த இந்த பதிவில் கூறியுள்ள குறிப்பை Follow பண்ணுங்க நண்பர்களே.!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Hair Oil: 

Maintain Hair Growth

 தேங்காய் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த கூடிய சக்தி உள்ளது. ஆலிவ் ஆயில் முடியின் வெடிப்பை சரி செய்ய உதவுகிறது. ஆரோக்கியமாக முடி வளருவதற்கு உதவுகிறது. வைட்டமின் E கேப்சூல் முடியை அடர்த்தியாக வளர உதவுகிறது. 

ஒரு கிண்ணத்தில் 6 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் தேக்கரண்டி,  வைட்டமின் E கேப்சூல் 2 சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்ளோ தாங்க எண்ணெய் ரெடி..! இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.

இந்த எண்ணெயை தினமும் தேங்காய் எண்ணெய் தடவுவது போல தடவி கொள்ளலாம். இல்லையென்றால், வாரத்தில் ஒரு நாள் தலையில் அப்ளை செய்து குளித்து விடலாம்.

இதையும் படியுங்கள் ⇒ தலைமுடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க வெந்தயம், கற்றாழை மட்டும் போதும்..!

Hair Mask:

Maintain Hair Growth

 ஆளிவிதையில் அதிகமான சத்துக்கள் உள்ளது. அதனால் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வெந்தயம் உடலில் உள்ள சூட்டை தணிக்கவும், முடி பளபளப்பாகவும், பொடுகை நீக்கவும் மற்றும் முடி வளர்வதற்கும் பயன்படுகிறது. செம்பருத்தி இலை முடியை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.  

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். ஆளிவிதை 1 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி வெந்தயம், செம்பருத்தி இலை 4 சேர்த்து கலந்து விடவும். கொஞ்சம் நேரம் கொதித்தவுடன் கையில் எடுத்து பார்த்தால் பிசுபிசுப்பு தன்மை இருக்கும். இந்த நிலை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த மாஸ்க்கை வடிகட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து ஆறவிட்டு வேண்டும். ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.

இந்த மாஸ்க்கை தலை குளிப்பதற்கு முன்பு அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி தேய்த்து குளிக்கலாம்.

இந்த பேக்கை வாரத்தில் 2 முறை என்று 2 வாரத்திற்கு செய்து வாருங்கள் நீங்களே மாற்றத்தை காண்பீர்கள்.

இதையும் படியுங்கள் ⇒ நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இந்த ஹேர் டையை பயன்படுத்துங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement