தலை சீவும் போது சீப்பு முழுவதும் முடியாக உள்ளதா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சீப்பில் ஒரு முடிகூட வராது..!

Advertisement

Hair Regrowth Home Remedies in Tamil

பொதுவாக அனைவருக்குமே தங்களின் தலை முடியை மிகவும் பாதுகாத்து வைத்து கொள்வது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற வாழ்க்கை முறையால் நமது தலைமுடி அதிக அளவு உதிர்வதை கண்டு நமது மனம் மிகவும் கஷ்டப்படும். அதனால் அதனை சரி செய்வதற்காக நாமும் பல வகையான முயற்சிகளை கையாண்டிருப்போம்.

ஆனால் அவையாவும் நாம் எதிர்பார்த்த அளவிற்கு பலனை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்கள் தலையில் முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடி வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies to Stop Hair Fall and Regrowth in Tamil:

Home Remedies to Stop Hair Fall and Regrowth in Tamil

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்கள் தலையில் முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடி வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம்.

அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. செம்பருத்தி – 4 
  2. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
  3. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு  
  4. கரிசலாங்கண்ணி இலை – 1 கைப்பிடி அளவு 
  5. கொய்யா இலை – 1 கைப்பிடி அளவு 
  6. முருங்கை கீரை – 1 கைப்பிடி அளவு 
  7. சின்ன வெங்காயம் – 20 
  8. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் 
  9. தண்ணீர் – 250 மி.லி
  10. ஸ்ப்ரே பாட்டில் – 1

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 250 மி.லி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 20 நிமிடத்தில் உங்களின் தலையில் உள்ள அனைத்து நரை முடிகளும் வேரிலிருந்து கருமையாக மாற இதை மட்டும் ஒரே ஒரு முறை ட்ரை பண்ணுங்க போதும்

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 செம்பருத்தி, 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை, 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை, 1 கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலை, 1 கைப்பிடி அளவு கொய்யா இலை, 1 கைப்பிடி அளவு முருங்கை கீரை, 20 சின்ன வெங்காயம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை நாம் கொதிக்க வைத்துள்ள தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை நன்கு வடிக்கட்டி கொள்ளுங்கள். வடிக்கட்டிய தண்ணீரை நாம் எடுத்து வைத்துள்ள ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்களின் தலையில் ஸ்ப்ரே செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரு முறை என்று 2 மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் தலைமுடி உதிர்வு நின்று முடி நன்கு வளர்வதை காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்க முகம் நிலவை போல் நன்கு பொலிவுடன் காட்சியளிக்க வேண்டுமா அப்போ தயிருடன் இந்த பொருட்களை கலந்து தடவுங்கள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement