உதிர்ந்த முடி அனைத்தும் பல மடங்கு திரும்ப வளர இந்த ஹேர் பேக் மட்டும் போதும்..!

Advertisement

Home Made Remedy For Faster Hair Growth 

ஹலோ பிரண்ட்ஸ்..! அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு பிரச்சனை தான். ஆனால் ஆண்கள் அதில் அந்தளவிற்கு கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை,  ஒரு முடி உதிர்ந்தாலும் அதை சரி செய்வதற்கு பல முயற்சிகளை கையாளுவார்கள்.

அப்படி செய்வதால் இன்று இல்லையென்றாலும் நாளடைவில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் இன்றைய பதிவில் கூறும் இயற்கை ஹேர் பேக்கை பயன்படுத்தினால் உதிர்ந்த முடி அனைத்தும் வளரும். மேலும் தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் ஓரே தீர்வாக இந்த ஹேர் பேக் இருக்கும். அது எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Made Remedy For Faster Hair Growth in Tamil: 

  1. பச்சை பயிறு – 3 டேபிள் ஸ்பூன்
  2. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் – 10
  4. முட்டை – 1
ஆலமரத்தின் விழுதுகளே தோற்றுப்போகும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் பச்சை பயிறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

இந்த ஹேர் பேக்கை காலையில் அப்ளை செய்வதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

இரண்டும் நன்றாக ஊறியதும் அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை இரண்டு பாதியாக நறுக்கி அதில் சேர்த்து பேஸ்ட் போல அரைக்க வேண்டும்.

பின் அதில் அதை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும். அடுத்து நாம் அரைத்த பேஸ்ட்டில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஹேர் பேக் தயாராகி விட்டது.

நிலவுக்கும் உங்களுக்கும் போட்டி வைத்தால் நீங்கள் தான் வெள்ளையாக தெரிவீர்கள்..! அந்த அளவிற்கு கலராக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

அப்ளை செய்யும் முறை:

இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முடியில் சிக்கு இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

பின் உங்கள் முடியை இரண்டு பாதியாக பிரித்து கொள்ள வேண்டும். பின் ஹேர் பேக்கை முடியின் அடிப்பகுதியில் இருந்து முடியின் நுனி பகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

இந்த் ஹேர் பேக் உங்கள் தலையில் குறைந்தது 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். பின் தலைக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான்.  இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உதிர்ந்த முடி அனைத்தும் பல மடங்காக திரும்ப வளரும். மேலும் பொடுகு பிரச்சனை முற்றிலும் நீங்கி முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.  

அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement