உங்க முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டுமா..? அதற்கு ஆரஞ்சு தோல் மட்டும் போதும்..!

Advertisement

Home Remedies for Shiny Face in Tamil

பொதுவாக அனைவருக்குமே தங்களின் முகத்தை நிலவு போல் ஜொலிக்க வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்களின் அழகை பாதுகாத்து வைத்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் கடைகளில் விற்கப்படும் வேதிப்பொருட்கள் கலந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனை பயன்படுத்துவதால் நமக்கு தீமையை அளிக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் முகத்தை நன்கு பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Natural Remedies for Shiny Face in Tamil:

Natural Remedies for Shiny Face in Tamil

உங்களின் முகத்தை எப்பொழுதும் நன்கு பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி அறிந்து கொள்வோம்.

  1. ஆரஞ்சு தோல் – 1 கைப்பிடி அளவு
  2. ஆவாரம் பூ பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  3. ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்
  5. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
  6. வைட்டமின் E கேப்சூல் – 2

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> முகத்தில் உள்ள பள்ளங்களை மறைய வைக்க பாலுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

ஆரஞ்சு தோலை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு ஆரஞ்சு தோலை நன்கு சுத்தம் செய்து விட்டு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடனே 2 டேபிள் ஸ்பூன்  ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.

ஆவாரம் பூ பொடியை கலக்கவும்:

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆவாரம் பூ பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கிளிசரினை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லை கலந்துக் கொள்ளவும்:

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கழுத்தில் உள்ள கருமையை போக்க தக்காளியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்கள் போதும்

வைட்டமின் E கேப்சூலை சேர்க்கவும்:

இறுதியாக அதனுடனே நாம் எடுத்து வைத்திருந்த 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் கலந்து கொள்ளவும். பின்னர் இதனை உங்களின் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள்.

இதனை தினமும் அல்லது வாரத்திற்கு இரு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடனும் பளபளப்பாகவும் இருக்கும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் முகம் மட்டுமில்லாமல் உங்கள் உடல் முழுவதும் பொலிவு பெற பாலுடன் இந்த ஒரு பொருளை கலந்து தடவுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement