முடியின் வளர்ச்சியை அதிகரிக்க
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க என்ன தான் செய்வது என்ற பெரிய கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான தீர்வை நாம் தான் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று சிலர் நிறைய ஹேர் பேக், ஹேர் ஆயில் மற்றும் ஹேர் மாஸ்க் என பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் நாம் செயற்கையான முறையில் தயாரிக்கும் எந்த பொருளையும் நமது முடிக்கு உபயோகப்படுத்துவது முடியின் வளர்ச்சியை நீங்கள் நினைப்பது போல அதிகரிக்க செய்யாது. அதனால் மிக வேகமாக முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வதற்கு இயற்கையான முறையில் ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Hair Growth Faster at Home:
முடியின் வளர்ச்சியை நீங்கள் நினைப்பது போல அதிகரிக்க செய்வதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று பார்க்கப்போகிறோம்.
முடி வளர்ச்சி குறிப்புகள்:
முதலில் ஆமணக்கு எண்ணெய் வைத்து ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். su_highlight background=”#fef51b”]ஆமணக்கு எண்ணெயில் வைட்டமின் E மற்றும் புரதங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதனால் இது முடியின் வளர்ச்சிக்கும் மற்றும் முடி உதிர்வை தடுப்பதற்கும் ஒரு சிறந்த பொருளாக இருக்கிறது. [/su_highlight]
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் பவுடர்- 1 தேக்கரண்டி
- வெந்தயம் பவுடர்- 1 தேக்கரண்டி
- ஆமணக்கு எண்ணெய்- 1/2 கப்
இதையும் படியுங்கள்⇒ ஆண்கள் முகம் பொலிவு பெற 5 அழகு குறிப்புகள்..!
செய்முறை:
ஸ்டேப்- 1
அதனால் முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைய்யுங்கள். இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி அதன் மேலே கொஞ்சம் குழியாக உள்ள பெரிய அளவிலான பவுலை வைத்து அதில் 1/2 கப் ஆமணக்கு எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது எண்ணெய் சிறிது நேரம் காய்ந்த பிறகு எடுத்துவைத்துள்ள நெல்லிக்காய் பவுடர் மற்றும் வெந்தயம் பவுடர் இரண்டையும் சேர்த்து 20 நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 3
20 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அடுப்பில் இருக்கும் ஷாம்பினை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடுங்கள்.
ஸ்டேப்- 4
சிறிது நேரம் கழித்த பிறகு ஒரு பாத்திரத்தில் காட்டன் துணி வைத்து அதில் ஆற வைத்துள்ள ஷாம்பினை ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஷாம்பு தயார் ஆகிவிட்டது.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஷாம்புவை கண்களில் படாதவாறு தலையில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இதனை மட்டும் செய்து பாருங்கள் முடியின் வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்க கூடும்.
இதையும் படியுங்கள்⇒ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! உங்க முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே இரவில் மாயமாய் மறைந்துவிடும்…!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |