ஒரே வாரத்தில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

Remove Dark Spots Home Remedy in Tamil

Remove Dark Spots Home Remedy

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் வருவது சகஜம் தான். ஆனால் அது நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு தான் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் அதிகமாக காணப்படுகிறது.

இந்த கரும்புள்ளிகளை போக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் இருந்து கெமிக்கல் சேர்க்கப்பட்ட சோப்புகள் மற்றும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் சருமத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படுகின்றது. அதனால் இந்த கரும்புள்ளிகளை இயற்கையான முறையில் எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Remove Dark Spots Home Remedy in Tamil:

  • உருளைக்கிழங்கு –
  • எலுமிச்சை பழம் – 1
  • அரிசிமாவு – 2 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்: 

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்

முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பின் அதை காய் சீவும் கட்டையில் வைத்து நன்றாக சீவி கொள்ளவும். பின் உருளைக்கிழங்கு மாவு போல் வந்துவிடும்.

பிறகு நாம் சீவி வைத்துள்ள உருளைக்கிழங்கை பிழிந்து அதன் சாறை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

எலுமிச்சை சாறு சேர்க்கவும்:

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

பின் அதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து எடுத்து கொள்ளவும். அடுத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு அரிசிமாவு சேர்த்து பின் அதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! உங்க முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே இரவில் மாயமாய் மறைந்துவிடும்…!

பேஸ்ட் அப்ளை செய்யும் முறை:

Remove Dark Spots Home Remedy

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் மற்றும் கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் முகத்தில் 10 லிருந்து 15 நிமிடம் அப்படியே இருக்கட்டும்.

15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள். இதுபோல வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் மறைய தொடங்கும்.

 உருளைக்கிழங்கில் இருக்கும் பண்புகள் கருமை மற்றும் கரும்புள்ளிகள், தழும்புகளை நீக்கும் தன்மையை கொண்டுள்ளது. எலுமிச்சை பழத்தில் இருக்கும் அசிட்டிக் அமிலம் கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. அரிசிமாவு சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. ரோஸ் வாட்டர் முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.  

அதனால் இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மாயமாய் மறைந்துவிடும்.

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

 

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil