Veyil Karumai Neenga
இந்த வெயில் காலத்தில் நம்மால் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக காணப்படும். வெயிலினால் நம்முடைய தோல் ஆனது சுருங்கி விடும், அதுமட்டுமில்லாமல் கருத்தும் போகிவிடும். இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட வீட்டில் இயற்கையான குறிப்புகளை பயன்படுத்துவது நல்லது. அதனால் தான் இந்த பதிவில் வெயிலினால் கருமையான முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கான குறிப்பை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தக்காளி:

தக்காளியில் லைகோபீன் என்ற சத்து உள்ளது, இந்த சத்தானது நம்முடைய முகத்தை இயற்கையாகவே பிளிச்சிங் செய்வதற்கு உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.
முதலில் தக்காளி எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். இந்த பாதியில் சீனியை வைத்து முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு தக்காளி சாற்றை எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் கடலை மாவு சிறிதளவு கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள கருமை நீங்கி பளபளப்பாக இருக்கும்.
நுங்கு:

இந்த சீசனில் நுங்கு கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனை வைத்து தான் முகத்தை பளபளப்பாக மாற்ற போகின்றோம். அவை எப்படி என்று அறிந்து கொள்வோம்.
முதலில் நுங்குவை எடுத்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பேக்காக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.
| இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |














