எட்டு காலங்கள் | Ettu Kalangal

Advertisement

எட்டு காலம் | 8 Kaalangal in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மீக பதிவில் காலம் வகைகளில் மொத்தம் 8 வகை இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் எந்தெந்த நேரத்தினை குறிக்கிறது, அது என்ன மாதிரியான காலம் என்று தெரிந்துக்கொள்ளலாம்.. வாங்க 8 காலங்களுக்குரிய விளக்கத்தினை விரிவாக தெரிஞ்சிக்கலாம்..

ராகு காலம் என்றால் என்ன?

எட்டு காலங்கள்:

காலம் நேரம்  காலம் வகை 
விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்த காலம் 
அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தேவர்கள் காலம் 
முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை ரிஷி காலம் 
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பிதுர் காலம் 
பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை சந்தியா காலம் 
முன் இரவு 6 மணி முதல் 9 வரை பூத காலம் 
நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை பிரேத காலம் 
பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை ராட்சச காலம் 

பிரம்ம முகூர்த்த காலம்:

இந்த பிரம்ம முகூர்த்த காலத்தில் திதி, நட்சத்திரம் சரியில்லாமல் இருந்தாலும் அனைத்து விதமான நல்ல காரியங்களும் செய்யலாம்.

உதய காலம் (தேவர் காலம்):

உதய காலம் தேவர்களுக்கு உரியது என்பதால் வேளையும், நட்சத்திரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.

ரிஷி காலம்:

ரிஷி கால நேரத்தில் ஏதேனும் நல்ல காரியம் செய்ய நல்ல ஓரை, நட்சத்திரம், வேளையை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.

பிதுர் காலம்:

பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும், நட்சத்திரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.

சந்தியா காலம்:

சந்தியா கால நேரத்தில் இறை வழிபாடு, ஜெபம், தவம் போன்றவற்றை மட்டுமே செய்ய உகந்த காலமாகும்.

சுபகாரியம் செய்யக்கூடாத நேரம்:

நடுப்பகல் 12 மணி அல்லது நள்ளிரவு 12 மணி அளவில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கவோ, முடிக்கவோ கூடாது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement