வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சித்ரா பௌர்ணமி சிறப்பு | Chitra Pournami Special

Updated On: April 28, 2026 5:07 PM
Follow Us:
Chitra Pournami Special
---Advertisement---
Advertisement

சித்திரா பௌர்ணமியின் சிறப்பு

சித்ரா பெளர்ணமி எனும் மிக சிறப்பு வாய்ந்த தினத்தில் எப்படி அம்பாளை என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது. அந்த வகையில் இந்த மாதம் அதாவது 16-04-2022 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சித்ரா பவுர்ணமி வரவிருக்கின்றது.

அதாவது தமிழ் மாதத்தில் சித்திரை 3ஆம் தேதி. நிறைந்த சித்திரா பௌர்ணமி தினத்தில் நம்முடைய குடும்பம் சுபிட்சமாக இருக்கவும், குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆயுள் பலத்தை அதிகரிக்கவும், நோய்நொடிகள் இன்றி இருக்க அம்பாளை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் வாங்க.

சித்ரா பௌர்ணமி சிறப்பு | Chitra Pournami Special

வழிபடும் முறை:

சித்திரை மாத பௌர்ணமி தினத்தன்று அம்பாளின் திருவுருவ சிலை அல்லது படத்திற்கு மலர் மாலை அணிவித்து, வஸ்திரம், ஆபரணங்களை அணிவித்து வழிபடுவது நல்லது.

நைவேத்தியம்:

அம்பாளுக்கு மஞ்சள் கலந்த சாதம் படைத்து, பானகம், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்த தாம்பூலம் அடங்கிய நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும்.

சித்ரா பௌர்ணமி அம்பாள் வழிபாடு பலன்:

சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.

சித்திரை மாத சிறப்புகள்
சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா?

சித்ரா பௌர்ணமி சிறப்பு – Chitra Pournami Special:

பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. அந்த வகையில் சித்ரா பௌர்ணமிக்கான சிறப்புகள் இருக்கிறது. அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்வோம்.

இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

சித்ரா பௌர்ணமி நாளில் குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்றும் கூறப்படுகிறது.

நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சித்ரா பௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராகப் பெருமாள் ‘நடவாவி’ என்னும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும்விதமாக இந்தத் திருவிழா நடந்து வருகிறது.

மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் சிறப்பு மிக்க வைவபமாகிறது. கன்னியாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டு கழிக்கலாம்.

மேலும் இது போன்று பல இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

சித்ரா பௌர்ணமி அன்று கங்கை நீரில் குளிப்பது பாவங்களை நீக்கி, புண்ணியங்களை சேர்க்கும் என்ற நம்பிக்கை ஆன்மிகத்தில் இருக்கிறது.

மேலும் இன்றைய நாள் தானம் வழங்குவது, ஏழைகளுக்கு உதவுவது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now