தசா புத்தி அட்டவணை மற்றும் பலன்கள், காலங்கள் முழு விபரம்

Advertisement

தசா புத்தி என்றால் என்ன? | Dasa Puthi Endral Enna?

கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு நிச்சயம் ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும். சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி போன்றவை ஜாதகத்தில் தசாபுத்திகளின் அடிப்படையில் தான் நடக்கும் என்று ஜோதிடர்கள் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். அப்படி ஆன்மிகத்தில் சொல்லப்படும் தசா புத்தி என்றால் என்ன மற்றும் அதற்கான அட்டவணையை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு நடக்கும் தசை புத்தி கண்டறிவது எப்படி மற்றும் அதன் அட்டவணை, பலன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம் வாங்க.

தசா புத்தி என்றால் என்ன?

  • ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அவர் பிறந்த நட்சத்திர அதிபதி அவருக்கு தசையாக வரும்.
  • அதாவது ஒருவர் பிறக்கும்போது கிரகத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் செல்கிறதோ அதுதான் அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். அந்த ஜென்ம நடசத்திர அதிபதி தசை தான் அவருடைய ஆரம்ப தசையாக இருக்கும்.
  • தசை சில ஆண்டுகள் அல்லது மாதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது, அந்த ஆயுளுக்குள் அவர் பிறந்த நேரத்தில் இருந்து இறப்பு நேரம் வரை ஒன்பது தசாபுத்திகள் நடைபெறும்.
  • ஒவ்வொரு ஜாதகருக்கும் அவருடைய வாழ்வில் நடக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை கிரகங்கள் தன்னுடைய தசாபுத்தி வருட காலங்களில் செயல்படுத்துகிறது.
  • ஒரு தசை என்பது.. 9 புத்திகள் 81 அந்தரங்கள் மற்றும் 729 சூட்சமங்களை உள்ளடக்கியது ஆகும். 20 வருடங்களை கொண்ட சுக்கிர தசையில் ஒரு சூட்சமம் என்பது அதிகபட்சம் சுமார் 34 நாட்களாக வரும். கடைசியாக ஒரு ஜாதகத்தில் உள்ள விதிப்படி, ஒரு கிரகம் நன்மை செய்வதாக இருந்தாலும் அல்லது தீமை செய்வதாக இருந்தாலும் அதன் தசாபுத்தி காலங்களில் தான் அதனை செய்ய முடியும்.

​தசா, புத்தி எப்படி பலன் தரும்:

ஒவ்வொரு கிரகமும் தனது தசாவில் அல்லது புத்தி காலத்தில், அந்த கிரகம் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து பொறுத்து அதற்கான பலன் ஜாதகருக்கு நல்லதாக அல்லது தீய பலனாகவும் கொடுக்கும்.

இந்த பலன் கொடுப்பதில் தசாநாதன் கிரகம் மேலதிகாரி போலவும், அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளைப் போல புத்தி நாதனுக்குரிய கிரகம் இயங்கும்.

இதனடிப்படையில் ஜாதகர் தனது பலனை அனுபவிக்க வேண்டி இருக்கும். அதனால் தான் எந்த ஒரு கிரக பெயர்ச்சியின் போது (குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி) ஜாதகரின் தசா, புத்தி பொருத்து தான் பெரும்பாலான பலன் கிடைக்கும்.

தசா புத்தி காலங்கள்:

தசைகளுக்கான காலம் 
சூரிய தசை  6 ஆண்டுகள் 
சந்திர தசை  10 ஆண்டுகள் 
செவ்வாய் தசை  7 ஆண்டுகள் 
ராகு தசை 18 ஆண்டுகள் 
குரு தசை 16 ஆண்டுகள் 
சனி தசை 19 ஆண்டுகள் 
புதன் தசை 17 ஆண்டுகள் 
கேது தசை 7 ஆண்டுகள் 
சுக்கிர தசை 20 ஆண்டுகள் 
மொத்தம்  120 ஆண்டுகள் 

மேற்கூறிய வரிசையில் தான் ஒவ்வொரு கிரகமும் தன் தசையை நடத்துகிறது. நம் முன்னோர்கள் இந்த 27 நட்சத்திரங்களையும் ஒவ்வொரு கிரகத்திற்கும் தலா மூன்று நட்சத்திரங்கள் என ஒன்பது கிரகங்களுக்கும் சமப்பங்காக பிரித்து வைத்துள்ளனர். அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியாக வருவார்கள்.

  1. அஸ்வினி, மகம், மூலம் -கேது
  2. பரணி, பூரம், பூராடம்-சுக்கிரன்
  3. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன்
  4. ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் -சந்திரன்
  5. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் -செவ்வாய்
  6. திருவாதிரை, சுவாதி, சதயம் -ராகு
  7. புணர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு
  8. பூசம், அனுசம், உத்திரட்டாதி -சனி
  9. ஆயில்யம், கேட்டை, ரேவதி- புதன்

தசா புத்தி கண்டுபிடிப்பது எப்படி Online?

நட்சத்திரம்  அதிபதி  ஆண்டு 
அஸ்வினி மகம் மூலம்  கேது 7
பரணி பூரம் பூராடம் சுக்கிரன் 20
கிருத்திகை உத்திரம் உத்திராடம் சூரியன் 6
ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் சந்திரன் 10
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் செவ்வாய் 7
திருவாதிரை சுவாதி சதயம் ராகு 18
புணர்பூசம் விசாகம் பூரட்டாதி குரு 16
பூசம் அனுசம் உத்திரட்டாதி சனி 19
ஆயில்யம் கேட்டை ரேவதி புதன் 17

புத்தி:

புத்தி என்பது தசையில் உள்ள 120 வருடங்களை சமபங்காக பிரிக்காமல் ஒவ்வொரு கிரகங்களின் தசா வருடங்களை கணக்கில் வைத்து ஒன்பது பங்குகளாக பிரிப்பது தான் புத்தி ஆகும். புத்தி கிரகங்கள் வருடத்திற்கு ஏற்ப மாறுபடும்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு சந்திர தசை, ராகு புத்தி என்று வைத்து கொள்வோம்.

  • சந்திர தசா வருடம் = 10 
  • ராகு தசா வருடம் = 18
  • புத்தி கணிதம் =(10×18)/120 = 1.5 வருடங்கள் 

இந்த 1.5 வருடங்களை 12 ஆல் பெருக்கவும்

1.5×12 = 18 மாதங்கள் அப்படியென்றால் 1 வருடம் 6 மாதம் ஆகும்.

இதுதான் சந்திர தசா, ராகு புத்தி காலங்கள் ஆகும்.

அந்தரம்:

  • புத்தியை ஒன்பது பகுதிகளாக பிரிப்பது அந்தரம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு புத்தியிலும் அந்தரம் முதலாவதாக வரும்.
  • குரு தசை சனி புத்தியில் முதலில் சனி அந்தரம் அடுத்து புதன் அந்தரம், கேது அந்தரம் என வரிசையாக வந்து குரு அந்தரம் முடிந்தவுடன் சனி புத்தி முடிவடைந்து அதே குரு தசையில் பிறகு புதன் புத்தி ஆரம்பமாகும்.
ஜாதக கட்டம் விளக்கம்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement