வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹோமத்தில் இடும் பொருட்கள் மற்றும் அதன் பயன்கள்..!

Updated On: May 7, 2024 6:58 PM
Follow Us:
Homa Porutkal in Tamil
---Advertisement---
Advertisement

Homa Porutkal in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய ஆன்மீகம் பதிவின் வாயிலாக ஹோமத்தில் போடும் பொருட்கள் பற்றியும் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே பாரம்பரியமாக ஹோமம், யாகம் செய்து வருகின்றோம். நாட்டிற்கே ஏற்படும் சிக்கலிலிருந்து காக்க யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல தனி நபருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபட செய்யப்படுவது தான் ஹோமம். அப்படி ஹோமம் செய்யும் போது என்னென்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம் வாங்க..!

கணபதி ஹோமம் செய்ய தேவையான பொருட்கள்

ஹோமத்தில் இடும் பொருட்கள்: 

பொதுவாக ஹோமத்தில் ஒரு சில பொருட்களை போடுவார்கள். அப்படி போடும் பொருட்களை சமித்து என்று சொல்வார்கள். சமித்து என்றால் ஹோமத்தில் போடும் குச்சிகள் ஆகும். ஆகவே ஹோமத்தில் போடும் பொருட்களின் பெயர்கள் மற்றும் பயன்களை தற்போது காணலாம்.

  • அத்திக் குச்சி : மக்கட்பேறு.
  • நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம் எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
  • அரசங் குச்சி : அரசாங்க நன்மை
  • கருங்காலிக் கட்டை: ஏவல்,பில்லி சூனியம் அகலும்
  • வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
  • புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
  • வில்வக் குச்சி : செல்வம் சேரும்
  • அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
  • ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும்
  • நொச்சி : காரியத்தடை விலகும்.
  • வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
  • துளசி : துளசி கொண்டு ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
  • சோமவல்லிக் கொடி: கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து சோமாம்ருதம் மருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும் இதனால் காச நோய் அகலும்.
  • பலாசு : சமித்து இது சநதிர கிரக சமித்தாகும். இதனால் சந்திசிரசு பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும் பவாக ரஸத்தால் ஞான விருத்தியும் சிறந்த புத்தியும் பெறலாம்.
  • அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
  • வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசகதி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்துகளால் ராஜ வசியம் ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
  • செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.
  • நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடாட்சம் ஏற்படும் சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
  • அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும் பிக்கு பரசு பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
  • வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும்.
  • தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தரப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
  • அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பரவ ஜென்ம வினைகளும், சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
  • கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர்.  இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
  • ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து யமனுக்குப் பிடித்தமானது.  இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
  • எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
  • புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
  • இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
  • தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
  • வல்லாரை கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.  சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
  • சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி, லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
  • வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஒழியும்.
  • மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
  • பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
  • நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
  • மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாங்களை நீக்கும். அதோடு கல்வியும் செல்வமும் தரும்.

எந்த ஹோமம் செய்தால் என்ன பலன்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now