திருவெண்காடு புதன் ஸ்தலம் | Puthan Kovil
ஒவ்வொரு கோவிலுக்கு என்று ஒரு சிறப்புகள் இருக்கிறது. அதனை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அதிலும் அதில் நவகிரங்களான புதன் இருக்கிற இடம் தான் திருவெண்காடு. இந்த கோவில் ஆனது நாகை மாவட்டத்தில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் திருவெண்காடு சிவத்தலத்தை (Shiva Temple) பற்றித் தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
தல வரலாறு:

இந்த ஸ்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக சிவன்பெருமான் அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவஸ்தலமாக (Shiva Temple) இது விளங்குகிறது. இங்கு சிவன் சுவேதாரண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அன்னை பிரம வித்தியம்பிகை என்ற பெயரிலும் அருள்பாலிக்கிறார். ஆதி சிதம்பரம் திருவெண்காடு என்ற புராண பெயரிலும் இந்த ஸ்தலம் அழைக்கப்படுகிறது.
நவகிரக ஸ்தலங்களில் இது புதன் ஸ்தலமாக விளங்குகிறது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம், விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளது. சுவேதாரண்யேசுவரர்க்கு, திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காட்டு நாயனார், திருவெண்காடு பெருமான் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவரே ஸ்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இந்த ஸ்தலத்தில் படி லிங்கத்திற்கு தினமும் நான்கு அபிஷேகங்களும், இங்குள்ள நடராஜர் பெருமானுக்கு ஆண்டிற்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுமாம்.
இந்த ஸ்தலம் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்தலமாக விளங்குகிறது. பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர்.
அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான்.
ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தியாக தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான்.
சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் (Shiva Temple) இது. நவக்கிரக தலத்தில் இது புதன் தலமாகும்.
திருவெண்காடு சிறப்பு:
சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.
புதன் ஸ்தலங்களில் முதல் ஸ்தலமாக விளங்குகிறது.
சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
திருவெண்காடு புதன் கோவில் வழிபடும் முறை
நரம்பு சம்மந்தமான நோய்கள் உள்ளவர்கள் புதன் பகவானை வழிபட்டு வந்தால் நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் என்பது மக்களின் அயராது நம்பிக்கையாக விளங்குகிறது.
மேலும் புத்திர தோசம், திருமண தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு உரிய பச்சை வஸ்திரத்தை அணிந்து கொண்டு வெண்காந்த மலர் சூட்டி, பாசி பருப்பு பொடியில் காரம் சேர்த்து நெய்வேத்தியம் செய்து, இரணவனை வணங்கி வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களது அயராத நம்பிக்கையாக இருக்குறது.
புதன் திசையானது ஒவ்வொரு வாழ்விலும் 17 முறை நீடிக்கும். அதனால் தான் புதன் சன்னதியில் நீங்கள் 17 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் பிரகாரத்தை 17 முறை சுற்றி வர வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
முதலில் திருவெண்காடு சுவாமியையும், அதன் பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகு கடைசியாக புதனை வழிபட வேண்டும்.பலன்கள்:
கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும். திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.
சன்னதி திறக்கும் நேரம்:
கோவிலில் தினமும் 6 பூஜைகள் நடக்கிறது.
- காலை 6 முதல் 7 திருப்பள்ளி எழுச்சி
- 8.30 முதல் 10 வரை கால சந்தி பூஜை
- 11.30 முதல் 12 வரை உச்சிக்கால பூஜை
- மாலை 5.30 முதல் 6.30 வரை சாயரட்சை பூஜை
- 7.30 முதல் 8.30 வரை இரண்டாம் கால பூஜை
- 8.30 முதல் 9.30 மணி வரை அர்த்தசாமம் பூஜை நடைபெறும்.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














