திருநள்ளாறு கோவில் திறக்கும் நேரம் முதல் சிறப்புகள் வரை..

Advertisement

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் தலத்தின் சிறப்பு

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மூலவர் தர்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்புகள் உள்ளது. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் நந்தியும் பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கி இருப்பதை காணமுடியும். மேலும் இத்தலம் சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில்களில் ஒன்று. மேலும் இத்தலம் சிவன் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 114 வது சிவத்தலமாக அமைத்துள்ளது. சரி இந்த பகுதியில் திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் (thirunallar temples) திருஸ்தலத்தின் சில விவரங்களை பற்றி இப்போது நாம் காண்போம்.

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் தல வரலாறு:

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் தலத்தின் சிறப்பு

நிடதநாட்டு மன்னன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்து கொண்டான். அப்பெண்ணை தேவர்கள்  மணந்துகொள்ள விரும்பினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தால். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.இவ்வாறான சூழலில் திருநள்ளாறு (thirunallar temples) நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியதால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். இதுவே இத்தலத்தின் வரலாறு.

திருநள்ளாறு தல பெருமை:

தர்ப்பாரண்யேசுவரர், அம்பிகை பிராணேஸ்வரி குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தை இல்லாத வேளையில் தர்ப்பாரண்யேசுவரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவத்தை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவாலயத்திற்கு எடுத்து சென்று வழிப்பட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளை பெற்றான்.

ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் போரில் வெற்றி பெற்றான். இந்திரன் இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியை பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரிதிஷ்டை செய்தான். அதே போல் மேலும் ஆறு மூர்த்திகளை படைத்தான். அவற்றில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது “தியாகவிடங்கர்” என்று அழைக்கப்படுகிறது. தியாகவிடங்கருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. தியாகவிடங்கரை வணங்கி வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வார் என்று நமிக்கை.

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் தீர்த்தங்கள்:

திருநள்ளாறு (thirunallar temples) என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே உண்மை. இத்தலத்தில் கோயிலை சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் என்ற தீர்த்த குளங்கள் உள்ளது.

அவற்றில் நளதீர்த்தத்தில் குளித்தால் சனி தொல்லை நீங்கும்.

பிரம்மதீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும்.

வாணி என்பது சரஸ்வதி என்ற பொருள், இந்த வாணி தீர்த்தத்தில் குளித்தால் மூடன் கூட கவி பாடுவான் என்ற நம்மிக்கை.

இது தவிர அக்கினி தீர்த்தம், கங்கை தீர்த்தம் என்பது நளவிநாயகர் சன்னதிக்குள் உள்ள கிணறுகள் ஆகும்.

திருநள்ளாறு  தங்கக்கவசம்:

சனிப்பெயர்ச்சி மற்றும் விசேஷ காலங்களில் சனிபகவான் தங்க காக வாகனத்தில் தங்க கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்வரனனை கண்டாலே எல்லாரும் ஓட்டம் பிடிக்கும் நிலைமையில் இருந்து, இங்கே தங்க கவசம் அணிந்த சனீஸ்வர பகவானை காண்பதற்கு அன்று கூட்டம் அலைமோதும்.

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் திருக்கோயிலின் திருவிழாக்கள்:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் இந்த மூன்று விசேஷ நாட்களில் இத்தலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் ஆலயம் திறக்கும் நேரம்:

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் தலத்தின் சிறப்பு

திருநள்ளாறு கோவிலுக்கு செல்வதற்கு கோவில் எப்போது திறந்திருக்கும் என்று தெரிந்து கொண்டால் தான் அந்த நேரத்திற்கு சென்று வழிபட முடியும். அதுமட்டுமில்லாமல் வெளியூரிலுந்து வருபவர்கள் அப்போது தான் அவர்கள் ஊரிலிருந்து சரியான நேரத்திற்கு கிளம்புவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் எப்போது திறந்திருக்கும் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

 திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் ஆலயம் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலயம் திறக்கப்படும். அதன் பிறகு மாலை 4. 30 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும்.  இந்த நேரத்தில் சென்றாள் சனீஸ்வரரை வழிபட முடியும்.

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் பிராத்தனைகள்:

சனி தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் நீங்க பிரம்மதீர்த்தத்திலும், கவி படும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் குளத்திலும் நீராடி பிராத்தனை செய்யவும்.

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் நேர்த்திக்கடன்:

வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறியதும் சனீஸ்வரபகவானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும்.

கோயில் முகவரி:

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி 609 606

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement