ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள்
உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வலிமை உள்ளது. உங்கள் தாத்தா, பாட்டி, முன்னோர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்கும் என்றும், அவர்கள் முழு ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. அந்த வகையில் நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மைச் சுற்றி எங்கும் இருந்துக் கொண்டிருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை மற்றும் ஐதீகம். இத்தகைய ஐதீகத்தை கடைப்பிடிக்கும் உங்களுக்காக இந்த பதிவு. இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுக..
Aadi Amavasai:
முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய அமாவாசை, மாதத்தில் இரண்டு முறை வந்தால், நாம் எந்த அமாவாசை தினத்தை கடைப்பிடிப்பது என்று குழப்பங்கள் வருவது இயல்புதான். அந்த வகையில் இந்த ஆடி மாதத்திலும் இரண்டு அமாவாசைகள் வருகின்றது. அதில் எந்த நாளில் நம் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது, இந்த மாத அமாவாசைகளில் ஏதேனும் சிறப்புகள் உள்ளதா என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.
தீராத கடனும் தீர ஆடி மாதத்தின் செவ்வாய் கிழமை தோறும் பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்கள். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே, அவர்களை நாம் அவர்களை வழிபட்டு பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பது போல தான், ஆடி அமாவாசையன்று அவர்களை வழிபட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
பொதுவாக மாதத்தில் இரண்டு அமாவசைகள் வந்தால் அந்த மாதத்தை அதிக மாதம் என்பார்கள். ஆடி 1 ஆம் தேதி அதாவது ஜூலை 17 மற்றும் ஆடி 31 அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று என இரு அமாவாசைகள் இந்த மாதத்தில் வருகிறது. அதிக மாதங்கள் அனைத்துமே பித்ருக்களை வழிபட உகந்த மாதங்கள் தான்.
ஆடி முதல் அமாவசை அன்று இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்.!
ஒரு மாதத்தில் ஜன்ம நட்சத்திரம் இரண்டு தினங்கள் வரும் என்றால், இரண்டாவது நட்சத்திரத்தையே நாம் ஜன்ம நட்சத்திரமாகக் கருதவேண்டும். அந்த அடிப்படையில் ஆகஸ்ட் 16-ம் தேதி வரும் அமாவாசையே ஆடி அமாவாசையாகக் கருதி முன்னோர் வழிபடுவது சிறந்தது. இந்த தினத்தில் நமது மூன்று தலைமுறை பித்ருக்களையும் வணங்கினால் நமது சந்ததிக்கு புண்ணியம் தேடித்தரும். இந்த மாதம், இரண்டு அமாவாசைகள் மட்டும் அல்லாது, ஜூலை 22 – ம் தேதி ஆடிப்பூரம், ஆகஸ்ட் – 1 -ம் தேதி ஆடித் தபசு, ஆகஸ்ட் – 3 – ம் தேதி ஆடிப்பெருக்கு, ஆகஸ்ட் 9 -ம் தேதி ஆடிக்கிருத்திகை ஆகிய விசேஷ தினங்களும் வருகின்றன. இந்த நாள்களில் நாம் இறைவழிபாடு செய்தால் சகல நன்மைகளையும் பெறலாம்.
ஆடி அமாவாசை ஏன் அவ்வளவு சிறப்பாக வழிபடுகிறார்கள் தெரியுமா..?
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று வரும் முதல் அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்று அர்த்தம். இந்த மாதத்தில் வரும் இரண்டு அமாவாசைகளும் சிறந்தவை, முதல் அமாவாசையில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தும், மாத கடைசியில் வரும் அமாவாசையில் எளியவர்களுக்கு அன்னதானம் அளிப்பதும் சிறந்தது. அமாவாசை அன்று புனித நீரில் நீராடி முன்னோர்களை வழிபட்டால் மிகவும் நல்லது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |