ஆடி பெருக்கு அன்று செய்ய வேண்டியவை | Aadi Perukku Enna Seiya Vendum
ஆடி பெருக்கு என்பது பெண்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. இந்நாளில் அம்மனை வழிபட்டு மனதார நினைத்து வழிபட்டால் நிச்சயம் நடக்கும். மேலும் இந்நாளில் விரதம் இருப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். ஆக இப்படி சிறப்பு வாய்ந்த நன்னாளில் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன விஷயம் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
ஆடி பெருக்கு அன்று மறக்காமல் செய்ய வேண்டியவை:
பிள்ளையாரை வணங்க வேண்டும்:
ஆடி பெருக்கு அன்று முதல் முறையாக பூஜை செய்யும் போது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட வேண்டும். மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபடும் போது விளக்கேற்றி வழிபட வேண்டும். நாம் நினைகின்ற செயல் நல்லபடியாக நடப்பதற்கு அருள் புரிகிறது.
தானம் கொடுக்க வேண்டும்:
ஆடி பெருக்கு என்று தானம் கொடுக்க வேண்டும். அதாவது சுமங்கலி பெண்கள் 3 அல்லது 5 நபர்களுக்கு ஒரு தாம்பூலத்தில் மஞ்சள், குங்குமம், தாளி போன்றவை வைத்து கொடுக்க வேண்டும். உங்களுக்கு வசதிக்கு தகுந்தது போல் எத்தனை நபருக்கு வேண்டுமானலும் கொடுக்கலாம்.
ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறை மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரியுமா..?
பொருட்கள் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்:
வீட்டில் சில பொருட்களை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாளை நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் தருவாள், அப்போது இந்த பொருட்கள் எல்லாம் குறையாமல் இருந்தால் பணவரவு அதிகரிக்கும்.
அரிசி, பருப்பு, உப்பு, புளி, காய்ந்த மிளகாய் போன்றவையை முதல் நாளே வாங்கி குறையாமல் வாங்கி கொள்ளுங்கள்.
தங்கம் வாங்க வேண்டும்:
ஆடி பெருக்கு அன்று பணம் இருப்பவர்கள் தங்கமோ, பொருளோ வாங்கி வைப்பார்கள். ஏனென்றால் அன்றைய நாள் நீங்கள் ஒரு ரூபாய் முதலீடு போட்டால் அடுத்த வருடத்திற்குள் அதனை பெருக்குவதற்கு உதவி செய்கிறது. இல்லை என்னால் தங்கமெல்லாம் வாங்க முடியவில்லை என்றால் குண்டு மஞ்சளாவது வாங்கி கொள்ளுங்கள்.
ஆடிப்பெருக்கு தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |