வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆடி 18 அன்று பெண்கள் மறந்தும் கூட இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!

Updated On: July 30, 2025 5:35 PM
Follow Us:
Aadi Perukku women should avoid in tamil
---Advertisement---
Advertisement

ஆடி பெருக்கு பெண்கள் தவிர்க்க வேண்டியவை

பொதுவாக தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்புக்குரியது. அதில் தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு பெற்றது. ஏனென்றால் இந்த மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு பெற்றது மற்றும் புதிதாக திருமணம் ஆகிருக்கும் பெண்களுக்கு தாலி பிரித்து கோர்ப்பார்கள். அதிலும் குறிப்பாக ஆடி 18-ம் தேதி அன்று பெண்கள் ஆற்றில் நீராடி இறைவனை வணங்குவார்கள். அன்றைய நாள் வழிபடுவதன் மூலம் திருமண தடைகள் நீங்கி வரன் அமையும், கணவனின் ஆயுள் கூடும், தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் வந்து முடியும். இப்படிப்பட்ட நாளில் பெண்கள் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ஆடி 18-ம் பெருக்கு அன்று பெண்கள் தவிர்க்க வேண்டியவை:

கருப்பு ஆடை:

ஆடி 18-ம் பெருக்கு அன்று பெண்கள் தவிர்க்க வேண்டியவை

ஆடி 18 அன்று பெண்கள் கருப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். அன்றைய நாள் மங்களகரமான நிறத்தில் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிய வேண்டும். இல்லையென்றால் திருமண புடவையை அணிந்து கொள்ளலாம். மேலும் கை நிறைய வளையல் அணிந்து, மஞ்சள் பூசி கொண்டு, நெற்றியில் விபூதி, பொட்டு வைத்து அம்மனை வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் அம்மனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

எவ்வளவு பெரிய கடன் சுமையும் குறைய ஆடி முதல் செவ்வாயில் இதை மட்டும் செய்யுங்க..!

கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்:

ஆடி 18-ம் பெருக்கு அன்று பெண்கள் தவிர்க்க வேண்டியவை

ஆடி 18 அன்று கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். கடனாக பணம், நகை போன்ற எந்த பொருளையும் கடனாக கொடுக்க கூடாது. மேலும் அன்றைய நாள் தானத்திலே சிறந்த தானமான அன்னதானத்தை வழங்கலாம். பெண்கள் கட்டாயம் ஆடி 18 அன்று அன்னதானம் வழங்க வேண்டும்.

கசப்பு நிறைந்த உணவுகள்: 

மகாலட்சுமி வாசம் செயயும் அந்நாளில் வீட்டில் கசப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதாவது கசப்பு நிறைந்த உணவுகளை சமைக்கவும் கூடாது, சாப்பிடவும் கூடாது. அதற்கு பதிலாக நலன் வாசமான உணவுகளை சமைக்க வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சண்டை போட கூடாது:

அன்றைய நாள் வீட்டில் சண்டை போட கூடாது, வீடு ரொம்ப அமைதியாக இருக்க வேண்டும். முக்கியமாக பெரியவர்களிடம் சண்டை போட கூடாது. அதனால் அன்றைய தினம் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று அவர்களின் அருளை பெற வேண்டும்.

நெய் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்:

வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை உருக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் இந்த பொருட்கள் மகாலக்ஷ்மியின் அம்சமாக இருக்கிறது. அதனால் இந்த பொருட்களை எல்லாம் உருக்குவதை தவிர்க்க வேண்டும்.

கடன் தொல்லை தீர ஆடி முதல் நாள் உப்பு ஜாடியில் இதை மட்டும் மறைத்து வைய்யுங்கள் 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now