வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆடி பூரம் வழிபாடு செய்தால் திருமணம் கை கூடி வரும்..

Updated On: July 24, 2025 6:00 PM
Follow Us:
aadi pooram viratham getting married in tamil
---Advertisement---
Advertisement

ஆடி பூரம் என்றால் என்ன.?

ஆடி மாதத்தில் சிறப்பாக கருதப்படுவது ஆடி பூரம் தான். இவை தமிழகர்களுக்கு முக்கியமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. ஆண்டாளின் பிறந்த நாளை தான் ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம். 27 நட்சத்திரங்களில் ஒன்றாக ஆடி பூரத்தை கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் நாம் ஆண்டாளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ஆடிப்பூரம் என்றால் என்ன.?

ஆடிப்பூரம் பண்டிகை பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது அம்மனை நினைத்து வழிபடுவது. இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்த நாளாக புராணங்கள் கூறுகிறது. மக்களை காப்பதற்கு அம்மன் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில் தான் தவத்தை ஆரம்பிப்பார்கள் என்று புராணங்கள் கூறுகின்றது.

ஆடிப் பூரத்தில் குழந்தை வரன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

திருமண தடை நீங்க:

திருமண தடை நீங்க

ஆடி பூரம் அன்று வீட்டில் வழிபாடு செய்து திருமண தடைகளை எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்கள் வீட்டில் காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன், கருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரி, ஆண்டாள் போன்ற எந்த வகையான அம்மன் படங்களையும் எடுத்து கொள்ளவும்.

அம்மன் படத்தை துடைத்து விட்டு மஞ்சள் மற்றும் பொட்டு வைக்க வேண்டும். பிறகு வாசனை நிறைந்த மலர்களால் மாலை அணிவிக்க வேண்டும். மஞ்சள் நிற நூலில் வளையல்களை மாலையாக கோர்த்து  அதனையும் அம்மன் படத்திற்கு அணிவிக்க வேண்டும்.

படத்திற்கு முன்னாள் இரண்டு நெய் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். உங்களின் வேண்டுதல்களை மனதார நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அம்மனுக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அதாவது

ஓம் சக்தி பரா சக்தி ஜெகன் மாதா ராஜ ராஜேஸ்வரி சரணம்”

என்ற மந்திரத்தை 6 முறை சொல்ல வேண்டும். கடவுளுக்கு நெய் வேத்தியமாக சர்க்கரை நிறைந்த பால் அல்லது சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை படைத்தது வழிபடலாம். ஒரு தாம்பூலத்தில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வளையல் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும். கடவுளை வெளிப்பட்டதும் கடவுளு படைத்த வளையல்களை அணிந்து கொள்ள வேண்டும். இந்த வளையலை அணிவதன் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும். இந்த வழிபாட்டை திருமணம் ஆனவர்கள் செய்வதன் மூலம் கணவனின் ஆயுள் அதிகரிக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

ஆடி 18 அன்று பெண்கள் கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now