Akhand Samrajya Rajyog Palangal in Tamil
பொதுவாக ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வதை தான் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். இவ்வாறு நவகிரகங்களின் அதிபதியாகக் கருதப்படும் சூர்யன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். சூரியன் சிம்ம ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து கிரகங்களிலும் எதிரொலிக்க இருக்கிறது. இதனால் அகண்ட பேரரசு ராஜயோகம் உருவானது இதன் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் இதன் பலன்கள் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிகமான நல்ல பலனை அளிக்கின்றது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள். அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க..
அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகத்தால் ஜாக்போட் அடிக்க போகின்ற 3 இராசிக்காரர்கள்:
சூரியன் சிம்ம ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து கிரகங்களிலும் எதிரொலிக்க இருக்கிறது. இதனால் அகண்ட பேரரசு ராஜயோகம் உருவானது.
இந்த ராஜயோகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு உருவானது குறிப்பிடத்தக்கது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் திடீர் செல்வமும் அதிர்ஷ்டமும் முழு ஆதரவு கிடைக்கும்.
அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம் வாங்க..
மேஷம்:
தற்பொழுது உருவாகியுள்ள அகண்ட சமர ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல விஷயங்களில் சாதகமான பலன்களைத் அளிக்கிறது. இந்த ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிக அளவு கிடைக்கும்.
மேலும் இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி காண்பார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். திடீர் பணவரவு அதிகரிக்கும். சிக்கிய பணம் இந்த நேரத்தில் கைக்கு வரும். தைரியமும் நம்பிக்கையும் முக்கியம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் மங்களகரமான பலன்களை அளிக்கும். இந்த ராஜயோகம் நிகழ்கின்ற பொழுது பல முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பல நன்மைகள் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் பழைய முதலீடுகள் நல்ல பலனைப் பெறும். தொழில்முனைவோர் புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடலாம். இது நல்ல பண வருமானத்தை அளிக்கிறது.
வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பும் உண்டு. இந்த காலகட்டத்தில் முக்கியமாக வேலை தொடர்பான பயணங்கள் பண பலன்களைத் தரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் அகண்ட சாம்ராஜ்ஜிய ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் நிறைய நம்பிக்கை உள்ளது. நீண்டநாட்களாக குழந்தை இல்லாத துலாம் ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். முக்கியமாக வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தால் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.
செல்வ செழிப்பை அதிகரிக்க கல் உப்பில் இதை மட்டும் மறைத்து வையுங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |