அர்ச்சகர் கனவில் வந்தால் | Archagar Kanavil Vanthal
கனவு என்பது நம்மில் பலருக்கும் கனவுகள் வருவது சாதாரணமானது தான். அப்படி வரும் போது சில கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் சில கனவுகள் ஞாபகத்தில் இருக்காது. அப்படி மறந்து போகும் கனவுகள் சில நேரங்களில் நடக்கும் போது எங்கோ நடந்தது போல் இருக்கும்.
ஆனால் கனவில் வருவது சில நேரங்களில் நடக்கும் போது தான் தெரியும் கனவு நமக்கு எதோ சொல்ல வருகிறது என்று புரியும். அதில் சில கனவுகள் ஏன் வருகிறது என்று ஒன்றும் புரியாது. அப்படி வருவதால் ஒன்று தான் கோவில் பூசாரி ஐயர் வருவதன் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம் வாங்க..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கனவுகள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா.?
அர்ச்சகர் கனவில் வந்தால்:
அர்ச்சகரை பார்த்தாலோ அல்லது பேசினாலோ அதில் எந்த நேரத்தில் பார்க்கிறர்கள் என்று ஒரு பலன் உண்டு அதிகாலையில் 6 மணிக்குள் பார்த்தால் நீங்கள் நினைத்தது 10 நாட்களுக்குள் நடக்கும் என்று பலன்.
கோவில் பூசாரி கனவில் வந்தால்:
பூசாரியை கனவில் பார்த்தால் நீங்கள் நினைத்த காரியம் சற்று தாமதமாக நடக்கும். ஆனால் நடந்துவிடும். நடக்கும் காரியம் சீக்கிரம் நடந்தே தீரும் என்று பலன். மேலும் உங்களது கடன் ஆனது சீக்கிரமே அடைந்து விடும் என்பதனையும் குறிக்கிறது.
அதுவே கோவில் பூசாரி தீர்த்தம் கொடுப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவராக இருந்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதனை உணர்த்துகிறது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 கனவு பலன்கள்..!
ஐயர் கனவில் வந்தால்:

ஐயரை கனவில் கண்டால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும் அதேபோல் நல்ல செய்தியை நினைத்த காத்திருப்பவர்களுக்கு மிகவும் நல்ல பதிலாக கிடைக்கும். நற்செய்தி கிடைப்பது உறுதி.
அந்தணர் கனவில் வந்தால்:
நீங்கள் அந்தணரை கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும். மேலும் வீட்டில் சந்தோசம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் நன்றாக பேசுவீர்கள். இதனால் உங்களின் உறவுகள் ஆனது பலப்படும் என்பதனை குறிக்கிறது.
பிராமிணர் கனவில் வந்தால்:
பிராமிணர் கனவில் கண்டால் குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது. அதுவே பிராமிணர் பணம் கொடுப்பது போல கனவு கண்டால் உங்களது பொருளாதார நிலைமை அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது.
ஐயர் கூட்டமாக இருப்பது போல் கனவு:
ஐயர் கூட்டமாக இருப்பது போல கனவு கண்டால் உங்களது வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்க போகிறது என்று அர்த்தம்.
அது ஐயர் சாபம் விடுவது போல கண்டால் அவர்களது வாழ்வில் இதுவரை இருந்த கடன் ஆனது தீர்ந்து விடும் என்பது குறிக்கிறது.
ஐயர் வீட்டிற்கு வருவது போல கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்க போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக வாழ போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
ஐயர் பணம் தருவது போல கனவு கண்டால் உங்களுடைய பொருளாதார வாழ்க்கை ஆனது முன்னேற போகிறது என்று அர்த்தம். நீங்கள் செல்வ செழிப்போடு வாழ போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
பூசாரி கனவில் வந்தால் என்ன பலன்:
பூசாரி உங்கள் கனவில் வந்தால் யாரோ ஒருவர் உங்களை சரியான வழியை கட்ட போகிறார் என்பதை குறிக்கிறது. இவை ஒரு மங்களகரமான விஷயமாக இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கையில் சாதிப்பதற்காக பலரும் வழிகாட்ட போகிறார்கள்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












