Budhan Sukran Serkai
ஆன்மீகத்தில் ஒவ்வொரு மாதத்தின் போதும் கிரக பெயர்ச்சி என்பது நடக்கிறது. இத்தகைய கிரகப் பெயர்ச்சியின் போது சுக்கிரன், செவ்வாய் மற்றும் புதன் இந்த அனைத்தும் அதனுடைய ராசியினை ஒவ்வொரு முறையும் மாற்றி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இத்தகைய பெயர்ச்சியின் போது 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைக்கும். இதன் படி பார்க்கும் போதும் ஜூலை மாதம் 25-ஆம் தேதி அன்று சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை ஆனது நடைபெறுகிறது. மேலும் இந்த சேர்க்கை ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிப்பதால் 12 ராசிகளில் 4-ராசிகளுக்கு அமோகமான பலன்களை அளிக்கிறது.
பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா
புதன் சுக்கிரன் சேர்க்கை:
கன்னி ராசி:
ஜூலை மாதம் 25-ஆம் தேதி அன்று புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை ஆனது நிகழ்வதால் லக்ஷ்மி நாராயண் யோகம் உண்டாகிறது. இத்தகைய யோகத்தினால் கன்னி ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல லாபம் மற்றும் வருமானம் ஏற்படும்.
மேலும் பண வரவு ஆனது நீங்கள் நினைத்ததை விட அதிகமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்கார்களுக்கு இத்தகைய யோகத்தினால் நிதிநிலை அமோகமாக இருக்கும். மேலும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். அதேபோல் புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும்.
நீங்கள் செய்யும் வியாபாரம் ஆனது முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மன அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
மிதுனம் ராசி:
ராசியில் 3-வது ராசியாக உள்ளது தான் மிதுன ராசி. இந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரையிலும் காணப்பட்ட கடன்கள் அனைத்தும் நீங்கும் நேரமாக உள்ளது. அதேபோல் உங்களுக்கான பணியில் பாராட்டுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் வியாபாரம் செய்பவர்களுக்கு இத்தகைய காலங்களில் நல்ல வருமானம் மற்றும் லாபம் ஏற்படும். உங்களுடைய வாழ்க்கையில் இனி வரும் காலம் ஆனது முன்னேற்றத்திற்கு உரிய காலமாக இருக்கிறது.
பரணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி..நவம்பர் மாதம் வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |