வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2025 சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Updated On: May 7, 2025 5:30 PM
Follow Us:
chitra pournami girivalam timings in tamil
---Advertisement---
Advertisement

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பௌர்ணமி என்றால் முழுமை என்று பொருள் .அதுவும் தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதமும், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும். இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் இன்றைய தினத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும். அதனால் சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் பற்றி பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

சித்ரா பவுர்ணமி கிரிவலம்:

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

பொதுவாக கோவிலுக்கு செல்கிறார்கள் என்றால் அந்த கோவிலில் எப்போது சிறப்பு நேரம் அல்லது சிறப்பு பூஜை செய்வார்களோ அப்போது தான் அங்கு செல்வார்கள். அந்த வகையில் சாதாரணமாக நீங்கள் கிரிவலம் சென்றாலே அதற்கான நேரத்தை பார்த்து தான் செல்வீர்கள்.

இந்த சித்ரா பவுர்ணமி ஆனது  மே 11 ஆம் தேதி வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகமே அறிவிக்கும். அந்த வகையில் இந்த முறையும் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அறிவித்துள்ளது. அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

அதுவும் பௌர்ணமி, இந்த நாளன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்வதற்கு உகந்த நேரத்தை பார்ப்போம். மே 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 08.01 PM மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் மே 12-ம் தேதி இரவு 10.25 PM மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் எப்போதும் பௌர்ணமி வரும் கூட்டத்தை விட அதிகமாக இருக்கும். இதற்கான ஏற்பாடுகள் ஆனது மாவட்ட நிர்வாகம் ஆனது செய்து கொண்டு வருகிறது. கிரிவல பாதையில் பக்தர்களுக்கு தேவையான இடங்களில் கடுக்கக் தண்ணீரும். கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்து கொண்டு வருகிறது. சித்ரா பௌர்ணமி அன்று விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கற்பூரம் ஏற்றுவதற்கு தடை விதித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இந்த திருவண்ணாமலை கோவிலை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இது பல சிறப்புகள் கொண்டது. இதனாலேயே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இங்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

(Apr 2024) திருவண்ணாமலை கிரிவலம் 2024

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now