வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் | Gowri Panchangam Tamil

Updated On: February 6, 2025 4:03 PM
Follow Us:
Gowri Panchangam Tamil
---Advertisement---
Advertisement

கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் | Gowri Panchangam

Gowri Panchangam Tamil – பஞ்சாங்கம் என்பது ஐந்து முக்கிய விஷயங்களை அடங்கியது. அவை தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஐந்து வகைகளை கொண்டு கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் பார்க்கப்படுகிறது. இவற்றைக் கொண்டு ஒவ்வொரு நாளும் சுப நாளா அல்லது அசுப நாளா என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகம் கணிக்கப்படுகிறது.

அதாவது இன்றைய சூரிய உதயம்/ அஸ்தமனம், நல்ல நேரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், சந்திராஷ்டமம் மற்றும் ஜோதிட பஞ்சாங்கம் மூலம் கணக்கிடப்படுகிறது. சரி இந்த பதிவில் பஞ்சாங்கத்தின் முக்கியத்துவம்? மற்றும் கௌரி பஞ்சாங்கம் அட்டவணை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

கௌரி பஞ்சாங்கம் என்றால் என்ன?

நம்மளுடைய ஒவ்வொரு நாளின் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருவகைகள் இருக்கின்றது. நன்மை தரும் நேரங்களை தெரிந்து கொண்டு அந்த சமயங்களில் சுப காரியங்களை செய்தால் நன்மையாக நடந்து முடியும். தீமை செய்யும் நேரங்களை தெரிந்து கொண்டால் அந்த சமயங்களில் நாம் சுப காரியங்கள் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடலாம்.

நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை கௌரி பஞ்சாங்கம் அட்டவணையில் நாம் தெரிந்து கொள்ள முடியும். அதில் ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப் பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது.
சரி இப்பொழுது ஒவ்வொரு கிழமையிலும் அதன் பதினாறு முகூர்தங்களும் எப்படி பட்டவையாக இருக்கின்றனதென்று என்பதை கீழ் கொடுத்துள்ள அட்டவணையில் நீங்கள் பார்க்கலாம்.

கௌரி பஞ்சாங்கம் அட்டவணை

கௌரி பஞ்சாங்கம் அட்டவணை – Gowri Panchangam Tamil
கிழமை காலம் 06.00 – 07.30 07.30 – 09.00 09.00 – 10.30 10.30 – 12.00 12.00 – 01.30 01.30 – 03.00 03.00 – 04.30 04.30 – 06.00
ஞாயிறு பகல் உத்தி அமிர்த ரோகம் லாபம் தனம் சுகம் விஷம் சோரம்
இரவு தனம் சுகம் சோரம் விஷம் உத்தி அமிர்த ரோகம் லாபம்
திங்கள் பகல் அமிர்த விஷம் லாபம் லாபம் தனம் சுகம் சோரம் உத்தி
இரவு  சுகம் சோரம் உத்தி அமிர்த ரோகம் விஷம் தனம் லாபம்
செவ்வாய் பகல் ரோகம் லாபம் தனம் சுகம் விஷம் உத்தி சோரம் அமிர்த
இரவு  சோரம் உத்தி சோரம் அமிர்த ரோகம் லாபம் சுகம் தனம்
புதன் பகல் லாபம் தனம் சுகம் விஷம் சோரம் அமிர்த உத்தி ரோகம்
இரவு  உத்தி அமிர்த ரோகம் லாபம் சுகம் தனம் விஷம் சோரம்
வியாழன் பகல் தனம் சுகம் சோரம் அமிர்த உத்தி விஷம் ரோகம் லாபம்
இரவு  அமிர்த ரோகம் விஷம் தனம் லாபம் சுகம் சோரம் உத்தி
வெள்ளை பகல் சுகம் சோரம் உத்தி விஷம் அமிர்த தனம் லாபம் சுகம்
இரவு  ரோகம் லாபம் தனம் சுகம் சோரம் உத்தி விஷம் அமிர்த
சனி பகல் சோரம் உத்தி விஷம் அமிர்த ரோகம் லாபம் சுகம் தனம்
இரவு  லாபம் தனம் சுகம் விஷம் உத்தி சோரம் அமிர்த ரோகம்

 

இலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப முகூர்தங்களாகும். விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப முகூர்தங்களாகும்.

கௌரி பஞ்சாங்கம் லாபம் என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். அதாவது எல்லாம் லாபகரமாக முடியும்.

அமிர்தம் என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் கிட்டும்.

கௌரி பஞ்சாங்கம் சுகம் என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். அதேபோல் நோய்களினால் அவதிப்படுபவர்கள் இந்த நேரத்தில் நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் உடனே நோய் குணமாகும்.

தனம் என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நல்ல லாபமும் பெறலாம்.

கௌரி பஞ்சாங்கம் உத்தி என்றால் என்ன?

இந்த சுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் உத்தியோகம் சம்மந்தப்பட்ட காரியங்கள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு சம்மந்தப்பட்ட முயற்சிகள் செய்தால் வெற்றி கிட்டும்.

விஷம் என்றால் என்ன?

விஷம் என்பது அசுப முகூர்த்தம் ஆகும். இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் தோல்வி தான் கிட்டும். தேவையற்ற விவகாரங்களும், விரோதங்களும் ஏற்படும்.

சோரம் என்றால் என்ன?

இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை செய்தாலும் எதாவது தடை ஏற்பட்டு நின்று போகும். பொருள்கள் அல்லது பணம் களவாடப்படும்.

Soram Meaning in Gowri Panchangam in Tamil:

ரோகம் நல்ல நேரமா – இந்த அசுப முகூர்த்தம் நடைபெறும் நேரங்களில் எந்த சுப காரியத்தையும் செய்யக் கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் நோய் அதிகமாகும். விரைவில் குணமாகாது.

பஞ்சாங்கத்தில் உத்தி என்றால் என்ன.?

பஞ்சாங்கத்தில் உத்தி என்பது சூரியனின் உத்தியோகம் என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்–> எந்த ஹோரையில் என்ன செய்யலாம்?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்

 

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now