ஹயக்ரீவர் மந்திரம்

Advertisement

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் மந்திரம்

இந்த உலகில் பிறந்த அனைவருமே பிறந்த உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே ஆறறிவு இருக்கிறது. இவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தங்களின் குழந்தைகளை படி படி என்று வற்புறுத்துகிறார்கள். ஆனால் எல்லாரும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்ல முடியாது. சில குழந்தைகள் மட்டும் தான் கல்வியில் முதலிடம் பிடிப்பார்கள். சில நபர்களுக்கு ஜாதகத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் கல்வியில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். இவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்க இந்தபதிவில் உள்ள அம்மந்திரத்தை கூறுவதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதுமட்டுமில்லாமல் உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை அடைவார்கள்.

ஹயக்ரீவர் மந்திரம்:

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் மந்திரம்

ஓம் ஞானானந்த மயம் தேவம்
நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே

ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரசெளம்
ஓம் நமோ பகவதே ஹயக்ரீவாய விஷ்ணவே
மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா

ஓம் ஐம் ஐம்
ஓம் ஹ்ராம் ஹ்ரெளம் ஹயக்ரீவாய ஸ்வாஹா

ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்:

ஓம் ஸ்ரீ வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்சஹ ப்ரசோதயாத்

மேல் கூறியுள்ள மந்திரத்தை கூற முடியாது என்றால் ஓம் ஹ்ரசெளம் ஹயக்ரீவாய நமஹ என்ற மந்திரத்தை மட்டும் கூறலாம். இதனை கூறுவதன் மூலம் மேல் கூறியுள்ள மந்திரதத்தை கூறிய பலன்கள் கிடைக்கும்.

மந்திரம் பொருள்:

அறிவில் சிறந்து விளங்குபவரும், தூய்மையான எண்ணம் கொண்டவரும், அனைத்து விதமான கல்விக்கும், கலைகளுக்கும் சிறந்து விளங்குபவரை வணங்குகிறேன்.

எப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்:

இந்த மந்திரத்தை எப்படி, எந்த கிழமையில் உச்சரிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை புதன் கிழமை அல்லது சனி கிழமைகளில் சொல்லலாம். உங்கள் வீட்டில் ஹயக்ரீவர் படம் இருந்தால் அவரின் படத்திற்கு முன்னடி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நெய் அல்லது நல்லெண்ணெயில் ஏற்றுங்கள். நீங்கள் எப்படி பூஜை செய்வதற்கு சாம்பிராணி பழம் வைத்து எப்படி பூஜை செய்வீர்களா அதே போல இதற்கும் பழம் வைத்து, சாம்பிராணி காட்டுங்கள்.

மேல் கூறியுள்ள மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதால் உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்களின் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவையும் நீங்கும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்க உதவும் குபேரர் மந்திரங்கள்..!

ஹயக்ரீவர் பற்றிய குறிப்பு:

“ஹயம்” என்ற வார்த்தை “ஹஸ்வம்” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது. ஹஸ்வம் அல்லது ஹயம் என்றால் “குதிரையை” குறிக்கும் சொல்லாகும். குதிரை ஆனது வலிமை நிறைந்த விலங்காக இருக்கிறது. இவை வேகமாக ஓடக்கூடிய திறனையும், அறிவுத்திறன் கொண்ட விலங்காகவும் இருக்கிறது. மனிதனின் குணத்தையும், செயலையும் புரிந்தடித்து கொள்ளும் திறன் குதிரைக்கு இருக்கிறது.

பபுராண காலத்தில் மது, கைடபர் என்ற அரக்கர்கள் வாழ்ந்தார்கள். இவர்களின் செயலானது நாளுக்கு நாலு மோசமாகி கொண்டிருந்தது. எந்த அக்கிரமத்தையும் ஒரு அளவிற்கு தான் பொறுத்து கொள்ள முடியும். அதனால் தேவர்களும், மனிதர்களும் பெருமாளிடம் இந்த அரக்கர்களை அழிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். இவைகளின் வேண்டுதலுக்கு இணங்க மனித உடலும், குதிரை தலையும் கொண்ட ஹயக்ரீவர் உருவத்தில் அந்த அரக்கர்களை அழித்தார். அதனால் நீங்கள் இவரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் நடக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement