வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை | How To Write Sri Rama Jayam in Tamil

Updated On: February 18, 2025 7:19 PM
Follow Us:
how to write sri rama jayam in tamil
---Advertisement---
Advertisement

How To Write Sri Rama Jayam in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. அனுமனின் மந்திரமான ஸ்ரீ ராமஜெயம்  எழுதி அனுமனிடம் வணங்கினால் பல நன்மைகளை பெறலாம். அதனால் தான் ஸ்ரீ ராம ஜெயம் என்பதை 108 முறை எழுதி அனுமனிடம் சமர்ப்பித்து வாங்குவோம். ஆனால், ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவர்க்கென்று ஒரு முறை இருக்கிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

நமக்கு ஏற்படும், கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம்.”ஸ்ரீராம ஜெயம்’ என்று எழுதுவதன் மூலம் எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுக்கும். வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி பக்தியை வெளிப்படுத்துவார்கள். இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போரில் ராமன் ஜெயித்து விட்டார் என்பதை சீதாதேவிடம் ஸ்ரீ ராம ஜெயம் என்று ஒரே வார்த்தையில் அனுமன் கூறினார். ஓகே வாருங்கள், ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் முறை எழுதும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆஞ்சநேயர் ஸ்லோகம்

ஸ்ரீ ராம ஜெயம் எப்படி எழுதுவது.?

ஸ்ரீ ராம ஜெயம் என்பதை ஒரு குடும்பம் மொத்தமாக 1008 முறை எழுத வேண்டும். இதில் ஒரு நாளைக்கு 108 முறை எழுத வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதும்போது உச்சரித்துக்கொண்டே எழுத வேண்டும். அப்போது தான் பலன்கள் அதிமாக கிடைக்கும். மேலும், நீல நிற மை கொண்ட பேனாவில் எழுதுவது நல்லது.

 ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் முறை

ஒரு வெள்ளை காகிதத்தில் நீங்கள் ஸ்ரீ ராம ஜெயத்தை யாரும் இல்லாத இடத்தில் உட்கார்ந்து எழுதவேண்டும்.ஏனென்றால் நெனெகல் எழுதும் பொழுது மற்ற எண்ணங்கள், மற்றவர்கள் பேசுவதை கேட்காமல் உங்களின் மனதிலும், எண்ணத்திலும் ஆஞ்சேநேயரை மட்டுமே மனதில் வைத்து எழுத வேண்டும். ஒவ்வொரு பேப்பருக்கும் மஞ்சள் அல்லது செந்தூரம் வைத்து கொள்ளுங்கள். இதனை வெள்ளை நிற நூலில் இடைவெளி விட்டு மாலையாக வரிசையாக கட்டி கொள்ளுங்கள். இதனை நீங்கள் 108, 1008 என்ற கணக்கில் எழுதி கொள்ளலாம்.

நம்மில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி விடுவார்கள் ஆனால், அதனை முறையாக இறைவனிடம் சமர்ப்பிக்க மாட்டார்கள். ஆகையால், ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் மட்டும் அதனின் நன்மைகள் பெற முடியாது. எழுதிய ஸ்ரீ ராம ஜெயத்தை முறையாக இறைவனிடம் சமர்பிப்பதன் மூலம் மட்டுமே நன்மைகள் பெற முடியும். ஆகையால் ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய பிறகு, அதனை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் வரிகள்..!

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஏன்.?

ஸ்ரீ ராம ஜெயம் எழுவது மிகப்பெரிய புண்ணிய பரிகாரம் ஆகும். ஸ்ரீ ராம ஜெயம் என்று 108 முறை எழுதி அதனை மாலையாக ஆஞ்சநேயர் கழுத்தில் மாலையாக போடுவதன் மூலம் நீங்கள் வேண்டிய அணைத்து நன்மைகள் நடக்கும்.

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதன் மூலம், நேர்மறை சிந்தனைகள் தோன்றும். ஸ்ரீ ராம ஜெயம் என்று உச்சரித்துக்கொண்டே எழுதும்போது மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலகி நற்குணங்கள் உண்டாகும்.

ஸ்ரீ ராம ஜெயம் யாரெல்லாம் எழுதலாம்:

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், தொழில் துவங்க நினைப்பவர்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், திருமணத்தடை உள்ளவர்கள், மனதில் குழப்பங்களுடன் இருப்பவர்கள், தொழில் நலிவடைந்தவர்கள், தொடர் தோல்விகளை சந்திப்பவர்கள், பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எம பயம் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கோழைகள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் தைரியம் பெறவும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ஆஞ்சேநேயர் கழுத்தில் மாலையாக போடலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now