Idarinum Thalarinum Lyrics in Tamil
பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது அதிக அளவு இருக்கும். அதாவது ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதாவது இஸ்லாமியர்கள் அல்லாவை வணங்குவார்கள். அதேபோல் கிறித்துவ மதத்தினர் இயேசு மற்றும் மேரி ஆகியோரை வணங்குவார்கள். அதேபோல் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிலர் சிவனையும் மற்றும் சிலர் விஸ்ணுவையும் வணங்குவார்கள். அதிலும் ஒரு சிலர் மிக மிக பக்தியுடன் கடவுள்களை வணங்குவார்கள். அப்படிப்பட்ட சிவபெருமானின் தீவிரமான பக்தர்களாக இருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனதிற்கு மிகவும் பிடித்த கடவுளை பலவகையான போற்றிகள் , மந்திரங்கள், பாடல்களை பாடி போற்றுவார்கள். அப்படிபட்ட சிபெருமானின் பக்தர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் இடரினும் தளரினும் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த இடரினும் தளரினும் பாடல் வரிகளை நாம் மனமார படித்தால் நமக்கு சிவபெருமானின் முழு அருளும் ஆசியும் கிட்டும். சரி வாங்க அந்த பாடல் வரிகளை பார்க்கலாம்.
ஐயப்பன் தோழன் வாவர் சுவாமி பாடல் வரிகள்
இடரினும் தளரினும் பாடல் வரிகள்
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….1
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….2
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….3
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….4
கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….5
ஐயப்பனின் நல் முத்து மணியோடு பாடல் வரிகள்
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….6
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….7
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….8
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….9
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….10
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய்
விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர்
நிலமிசை நிலையிலரே….11
முழுமுதற் கடவுளான விநாயகரின் பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்
இடரினும் தளரினும் பாடல் வரிகள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |