வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இறந்தவர்களை வழிபடும் முறை..!

Updated On: February 26, 2025 7:08 PM
Follow Us:
How to Worship the Dead in tamil
---Advertisement---
Advertisement

Method of Worship in Tamil | Iranthavarkalai Valipadum Murai

நம்மை இந்த உலகிற்கு அறிமுகபடுத்தியவர்கள் நம் முன்னோர்கள் தான். ஆகையால், நம் முன்னோர்களை வழிபடுவது மிகவும் அவசியம். அவர்களின் ஆசி இருந்தால் தான் குடும்பம் தழைக்கும் என்றும் கூறுவார்கள். பொதுவாக, ஒவ்வொரு வீட்டிலும் முன்னோர்களின் உருவ படத்தை வைத்து வழிபட்டு வருவார்கள். ஆனால், ஒரு சில வீடுகளில் முன்னோர்களின் உருவ படத்தை எங்கு வைக்க வேண்டும்.? எந்த திசையில் வைக்க வேண்டும்.? மற்றும் எப்படி வழிபட வேண்டும் என்றும் குழப்பத்தில் இருப்பார்கள். ஆகவே, அப்படி குழப்பத்தில் இருக்கும் அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இறந்தவர்களை வழிப்படுவது, இறந்தவர் மீதான அன்பையும் மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டது. அதுமட்டுமில்லாமல், அவர்களின் ஆசியை பெற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழவும் வழிவகுக்கிறது. ஆகையால், இறந்தவர்களை வழிபாடும் முறை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

இறந்தவர்களை வழிபடும் முறை:

இறந்தவர்களை வழிபடும் முறை

இறந்தவர்கள் படத்தை பூஜை அறையில் வைக்காமல், வீட்டின் வடக்கு சுவற்றில் மாற்றி தெற்கு பார்த்து வைக்குமாறு வைத்து வழிபட வேண்டும். அதாவது, இறந்தவர்களின் பார்வை தெற்கு நோக்கி இருக்குமாறு அவர்களின் படத்தை வைக்க வேண்டும்.

இறந்தவர்கள் படத்தை பூஜை அறை, படுக்கை அறையை தவிர்த்து விட்டு மற்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து வழிபாடு செய்யலாம்.

நம் முன்னோர்களை வழிப்படும்போது அவர்களுக்கென்று ஒரு தனி விளக்கை வாங்கி வைத்து வழிபாடுங்கள். அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு என எந்த விளக்கு வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம். ஆனால், அந்த விளக்கை மீண்டும் தெய்வங்களுக்கு பயன்படுத்த கூடாது.

இறந்தவர்களை வழிபடுவதற்கென்று தனி விளக்கை வாங்கி வைத்து கொள்ளுங்கள். கடவுளுக்கு ஏற்றும் விளக்கை இறந்தவர்களை வணங்குவதற்க்கு பயன்படுத்த கூடாது. இறந்தவர்களின் படங்களுக்கு முன்னால் தினமும் செம்பு நிறைய தண்ணீர் வையுங்கள்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

 இறந்தவர்களை வழிபடும் முறை

தினமும் இறந்தவர்களின் படத்தின் முன்னால் பூக்கள், கற்பூரம், ஊதுபத்தி போன்றவற்றை வைத்து விளக்கேற்றி வழிபட்டு வரலாம். முக்கியமாக, அமாவாசை போன்ற நாட்களில்  இறந்தவர்களை வணங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று இறந்தவர்களுக்கு வணங்கி அவர்களுக்கு உணவளிக்கும் விதமாக காகத்திற்கு சோறு வைக்கலாம். அன்றைய நாளே அவர்கள் பித்துருலோகத்திலிருந்து நம்மை தேடி வந்து நம் குடும்பத்தை ஆசிர்வதிப்பார்கள்.

தினமும் பூ போட்டு, தீப, தூப, ஆராதனை செய்து முன்னோர்களையும் வழிபடுவது நல்லது. நல்லெண்ணெய், நெய் போன்று எந்த எண்ணெய்யில் வேண்டுமானாலும் விளக்கு ஏற்றலாம். இப்படி வழிபாடு செய்யும்போது, பிதுர்க்ளின் மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் இன்னும் சிறப்பு. அப்படி இல்லையென்றால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை மட்டும் கூறி வழிபாடுங்கள்.

ஒரு சிலருக்கு இறந்தவர்களின் திதி நாள் தெரியாமல் இருக்கம். அப்படி இருப்பவர்கள்  வருடத்திற்கு ஒருமுறை வரும் மகாளய அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தர்ப்பணம் செய்து வரலாம். இவ்வாறு வழிபடுவதால் முன்னோர்களின் முழு ஆசியும் கிடைக்கும்.

முருக பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now