கோவிலில் இனி இதை செய்யாதீர்கள்
வணக்கம் நண்பர்களே..! நாம் வாழும் இந்த உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எப்படி மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். என்ன தான் இவ்வுலகம் மாறி இருந்தாலும் ஆன்மீகத்தில் அதீத பற்று கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சரி உங்களுக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் இருக்கிறதா..? இது என்ன கேள்வி என்று நினைப்பீர்கள். பொதுவாக நம் அனைவருக்குமே சிறுவயதில் இருந்து கோவிலுக்கு செல்லும் பழக்கம் இருக்கிறது. அப்படி கோவிலுக்கு போகும் போது சில விஷயங்களை நாம் கடைபிடிப்பது வழக்கம். அதுபோல சில விஷயங்களை கோவிலில் செய்ய கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். அப்படி கோவிலில் செய்ய கூடாத ஒரு விஷயத்தை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
| இந்த ஒரு பொருளை போதும் எல்லா திசையிலிருந்தும் பணம் வந்து கொண்டே இருக்கும் |
இதை மட்டும் கோவிலில் செய்யவே செய்யாதீர்கள்:

பொதுவாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னை அறியாமல் ஏதாவது தவறு செய்வது வழக்கம் தான். அதுபோல தெரிந்து செய்யும் தவறுகளை விட தெரியாமல் செய்யும் தவறுகள் தான் அதிகம்.
அதுபோல ஆன்மீக ரீதியில் தன்னை அறியாமல் பல தவறுகளை செய்து வருகின்றோம். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களை கோவிலில் செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
பொதுவாக நாம் வீட்டில் பூஜை செய்யும் போது இறைவனுக்கு பிரசாதம் படைத்து வழிபடுவோம். பூஜை முடிந்த பின் அந்த பிரசாதத்தை நம் வீட்டில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுப்போம். இப்படி செய்வது வழக்கம் தான்.
கல் உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வைத்தால் கடன் அடைந்து பணம் அதிகரிக்கும்..
ஆனால் சிலர் வீட்டில் இறைவனுக்காக நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை கோவிலில் இருக்கும் பக்தர்களுக்கு கொடுப்பார்கள். அனால் இப்படி செய்வது தவறு என்று சாஸ்திரம் கூறுகிறது.
அதாவது அன்னதானம் கொடுப்பது தவறல்ல..! ஆனால் வீட்டில் இறைவனுக்கு படைத்த பிரசாதத்தை கோவில் உள் இருக்கும் பக்தர்களுக்கு கொடுப்பது தவறு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல கோவிலுக்கு பிரசாதத்தை கொண்டு சென்று அங்கு இருக்கும் இறைவனுக்கு படைத்துவிட்டு, அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுக்கலாம். அதே நேரம் வீட்டில் படைத்த பிரசாதத்தை கோவிலில் இருக்கும் இறைவனுக்கு படைக்க கூடாது. இது மிகவும் தவறான ஓன்று.
அப்போ வேற என்ன செய்வது என்று யோசிப்பீர்கள்..!
நாம் வீட்டில் இறைவனுக்கு வைத்து படைத்த பிரசாதத்தை கோவிலுக்கு வெளியில் நின்று, கோவிலில் இருந்து வெளியே வரும் பக்தர்களுக்கு கொடுக்கலாம். இப்படி செய்வது ஓன்று தவறு இல்லை.
சரியாக 7 வாரத்தில் கடன் தீர்ந்து செல்வம் வந்து சேர மறக்கலாம் இதை மட்டும் செய்யுங்க
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














