Kadan Thollai Neenga
இந்த உலகத்தில் நமக்கு தேவைப்படும் ஒரு பொருளையோ அல்லது ஆசைப்படும் ஒரு பொருளையோ வாங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்கு முதலில் பணம் தான் தேவைப்படுகிறது. இத்தகைய பணம் என்பது நம்மிடம் போதிய அளவு இருந்தால் கவலை இல்லாமல் இருக்கலாம். அதுவே நம்மிடம் பணம் இல்லை என்றால் பணம் கடனாக வாங்க வேண்டிய சுழல் ஏற்படுகிறது. பொதுவாக யாராக இருந்தாலும் கடன் வாங்கும் போது இருக்கும் தெளிவில் கடனை அடைப்பதில் இருப்பது இல்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் செய்யும் சாதாரணமான செயல்களினாலும் கூட கடன் தொல்லை நீங்கும். அதனால் இன்று பெண்கள் வீட்டில் இருந்த சில பொருட்களை கொடுக்காமல் இருந்தால் கடன் தொல்லை இருக்காது என்று ஆன்மீகத்தில் கூறபடுகிறது.
செல்வ செழிப்பு உண்டாக ரொம்ப இல்லங்க 5 ரூபாய் பச்சை கற்பூரத்துடன் 2 ஏலக்காயை சேர்த்து வைய்யுங்க
கடன் தொல்லை:
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இவ்வாறு வழிபடும் நேரத்தில் சில பொருட்களை மாலை நேரத்தில் பிறருக்கு கொடுப்பதன் மூலம் கடன் பிரச்சனை இல்லாமல் இருந்தால் கூட கடன் தொல்லை வந்து விடும்.
- கல் உப்பு
- தயிர்
- பால்
- காமாட்சி விளக்கு
- வெள்ளி பொருட்கள்
- தங்கம்
- தண்ணீர்
- ஊசி
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றிய பிறகு பிறருக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் உங்களுடைய வீட்டிற்கும் மற்றவர்கள் வீட்டில் இருந்து வாங்கி வரக்கூடாது.
ஏனென்றால் மாலை நேரங்களில் இத்தகைய பொருட்களை கொடுப்பதனால் நமது வீட்டில் உள்ள மஹாலக்ஷ்மி அம்மையார் நமது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்று விடும்.
இத்தகைய நிகழ்வு ஆன்மீகத்தில் செய்வதன் மூலம் நமது வீட்டில் உள்ள செல்வம் குறைந்து கடன் பிரச்சனை வந்துவிடும் என்பது ஆன்மீகத்தில் ஒரு ஐதீகமாக உள்ளது. ஒருவேளை இத்தகைய பொருட்களை கொடுத்தாலும் கூட மாலை நேரங்கள், வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கொடுக்கக்கூடாது.
கல் உப்பு ஜாடி கீழே இந்த பொருளை மறைத்து வைய்யுங்க கஷ்டம் நீங்கி பணம் பெருகும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |