Kadan Prachanai Theera Valigal
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல கடமைகள் மற்றும் கனவுகள் உள்ள அவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நமக்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் சிறுக சிறுக சேமித்து பயன்படுத்துவோம். அதனை தாண்டியும் நமக்கு பணம் தேவைப்படுகின்றது என்றால் நாம் மற்றவர்களிடம் தான் கடன் வாங்குவோம். அப்படி நாம் வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதற்கும் நமது நிலைமை மிக மிக மோசமாகிவிடும். அதனால் தான் இன்று உங்களுக்கு உள்ள கோடி கடனையும் எளிதில் போக்க உதவும் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெற்று கொள்ளுங்கள்.
அள்ள அள்ள குறையாத அளவுக்கு பணம் வேண்டுமா அப்போ மண்சட்டில் இதை மட்டும் வையுங்கள்
கடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்:
நமக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளையும் போக்கி நமது வாழ்வில் பண வரவு அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
அது என்ன பரிகாரம் என்பதை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கண்ணாடி – 1
- கண்ணாடி பவுல் – 1
- கல் உப்பு – தேவையா அளவு
- 1 ரூபாய் நாணயம் – 1
- விரலி மஞ்சள் – 1
சிம்மத்தில் அஸ்தமனமாகும் சுக்கிரனால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சும்மா சூப்பரா மாற போகுது
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள கண்ணாடியை பூஜை அறையில் கிழக்கு பக்கம் பார்த்தபடி வைத்து கொள்ளுங்கள். அதற்கு பூக்கள் வைத்து கொள்ளுங்கள். பிறகு அதன் எதிர்பாக்கத்தில் நாம் எடுத்து வைத்துள்ள கண்ணாடி பவுலில் முக்கால் அளவு கல் உப்பினை நிரப்பி கொள்ளுங்கள்.
அதன் மீது 1 ரூபாய் நாணயம், 1 விரலி மஞ்சள் மற்றும் பூக்கள் வைத்து கொள்ளுங்கள். பிறகு நெய் விளக்கு ஒன்று ஏற்றி வைத்து மனமார பூஜை செய்து கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் இரவு 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள்.
போதும் போதும் என்கின்ற அளவு பணம் சேர ஆடிப்பெருக்கு அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |