கடன் தீர பணம் சேர
பொதுவாக கடன் வாங்கும் அனைவரும் வாங்கிய கடனை எவ்வளவு சீக்கிரமாக திருப்பிக்கொடுக்க முடியுமோ அதற்குள் குடுத்து விட வேண்டும் என்று நினைத்து தான் வாங்குகிறார்கள். ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு இதற்கு எதிர்மாறாக தான் அனைத்து செயலும் நடக்கிறது. ஏனென்றால் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்கான சூழ்நிலைகள் சரியாக அமையாத காரணத்தினால் கடன் அதிகரித்து கொண்டே போகும் நிலை தான் உண்டாகுகிறது.
இந்த கடனை அடைப்பதற்கான வழிகள் ஏதும் இருக்கின்றதா என்று கோவில் ஆற்றும் ஜோசியர்களை நாடுவோம். அவர்களிடம் சும்மா பரிகாரத்தை சொல்ல மாட்டார்கள். அதற்காக தனியாக நாம் பணம்கொடுக்க வேண்டியிருக்கும். இந்தமாதிரி பணம் கொடுக்காமல் வீட்டிலையே எளிய முறையில் பரிகாரம் செய்ய முடியும் என்றால் யார் செய்யாமல் இருப்பார். இந்த பதிவில் வீட்டிலையே எளிமையான முறையில் கடன் தீர்ந்து பணம் சேர்வதற்கான வழியை தெரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் செய்து பாருங்கள்.
பணக்கஷ்டம் தீர என்ன வழி:
இப்போது நீங்கள் பணக்கஷ்டம் தீர செய்யப்போகும் பரிகாரத்தை வாரந்தோறும் வெள்ளிகிழமையில் செய்து வாருங்கள். பொதுவாக வெள்ளி கிழமை ஆனது மங்களகரமான ஒன்றாக இருக்கிறது. இந்த நாட்களில் லட்சுமி தேவியின் நாளாக இருக்கிறது. அதனால் இந்த நாளில் கடன் தீர்ந்து பணம் சேரும். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துக்கொள்ளுங்கள்.
பன்னீர் ரோஜா- 7
வெள்ளிக்கிழமை அன்று முதலில் சுத்தமாக குளித்து விடுங்கள். அதன் பிறகு 7 பன்னீர் ரோஜாவினை கையில் வைத்து கொண்டு பூஜை அறையில் உள்ள மஹாலக்ஷ்மி அம்மையாரின் படத்திற்கு எதிரில் அமர்ந்து விடுங்கள்.
அதன் பிறகு உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கள் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாக வேண்டும் என்று நினைத்து மனதார பிராத்தனை செய்து கொள்ளுங்கள்.
கடைசியாக உங்களின் பிராத்தனை முடிந்த பிறகு பன்னீர் ரோஜாவினை மஹாலக்ஷ்மி அம்மையாரின் காலடியில் வைத்து விடுங்கள். மேலும் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டிற்கு அருகில் அம்மன் கோவில் இருந்தால் அங்கேயும் செய்யாலாம்.
அதேபோல் இந்த பரிகாரத்தை 7 வாரங்கள் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை காலை 6 to 7 அல்லது இரவு 7 to 8 ஆகிய நேரங்களில் தான் செய்ய வேண்டும்.
இத்தகைய பரிகாரத்தை நீங்கள் செய்து முடித்த கையோடு பணம் சேர்ந்து கஷ்டங்கள் நீங்க முயற்சினையும் செய்து வாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் 7 வாரத்திற்குள் கடன் தீர்ந்து விடும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
இந்த பரிகாரத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் கடனை அடைப்பதற்கான வழியையும் பார்ப்பது அவசியமானது.
வீட்டில் பணம் கட்டுக்கட்டாக சேர இப்படி செய்தால் போதுமா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |