கண் திருஷ்டி பரிகாரம்
கல்லடிபட்டாலும் கன்னடி பட கூடாது என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஏனென்றால் ஒருவன் நல்லா வாழ்ந்து வந்தாலே அவர்களை பார்த்து பொறாமை படுபவர்கள் ஏராளமானோர். அவர்களின் எண்ணம் கூட நம்மை பாதிக்கும். இதை தான் கண் திருஷ்டி என்பார்கள். ஒருவருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டாலே அவர்களை வறுமை, ஆரோக்கியத்தில் பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால் கண் திருஷ்டியை நீக்குவதற்கு சில எளிமையான பரிகாரங்களை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..
கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:
பரிகாரம்:1

வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் சிறிதளவு கல் உப்பு, காய்ந்த மிளகாய், நம் வாசலில் மூன்று இடத்தில் மண்ணை எடுத்து கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வீட்டில் உள்ள அனைவரையும் கிழக்கு முகமாக நிற்க சொல்லி தலையை சுத்தி மூன்று முறை சுத்தி விட்டு அடுப்பில் போட வேண்டும். இது போல் வாரம் வாரம் செய்து வந்தால் கண் திருஷ்டி நீங்கி விடும்.
வீட்டில் தடையில்லா பண வரவுக்கு வெள்ளிக்கிழமையில் ஏலக்காயை இப்படி பயன்படுத்துங்க..!
பரிகாரம்:2

வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு பெரிய கற்பூரத்தை வைத்து தலையை சுற்றி மூன்று முறை சுத்தி விட்டு வாசலில் அந்த கற்பூரத்தை ஏற்ற வேண்டும். அதன் பிறகு யாருக்கு நீங்கள் திருஷ்டி சுற்றி போட்டிர்களோ அவர்கள் வெளியில் செல்ல கூடாது.
பரிகாரம்:3
அமாவாசை நாள் அல்லது வெள்ளி கிழமைகளில் திருஷ்டி கழித்தால் உங்களின் உடலில் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் நீங்கி விடும். அதாவது கண் திருஷ்டியால் ஏதவாது உடல் பிரச்சனை ஏற்பட்டால் அவை நீங்கி விடும். சில நபர்கள் எங்காவது வெளியில் சென்று வந்தாலே தலைவலி அல்லது உடல் சோர்வாக இருக்கிறது என்று சொல்வார்கள். இதற்கு காரணம் கண் திருஷ்டி தான்.
வாசலில் கற்றாழை செடியை வைக்க வேண்டும், கற்றாழை செடிக்கு கண் திருஷ்டியை போக்க கூடிய சக்தி உள்ளது.
வீட்டில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க கல் உப்பு மட்டும் போதும்
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














