மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்கலாமா.?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பலரும் கந்த சஷ்டி விரதத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். கந்த சஷ்டி விரதம் இருந்தால், முருகன் வேண்டிய வரத்தினை அருள்வார். அதனால், முருகனின் அருளையும், கேட்டதை பெறவும் கந்த சஷ்டி விரதம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆண்களை விட பெண்களே அதிக எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள். ஆனால், ஒரு சிலர் பெண்களுக்கு சஷ்டி விரதம் ஆனது, மாதவிடாய் காலத்தில் வரும். அதனால், பெண்கள் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள்.
இதனால், மாதவிடாய் காலத்தில் கந்த சஷ்டி விரதம் இருக்கலாமா.? இருக்கக்கூடாதா.? என்று பெரியவர்களிடம் கேட்பார்கள். இந்த குழப்பம் பெரியவர்களுக்கே இருக்கும். ஆகையால், உங்கள் குழப்பத்தினை தீர்க்கும் விதமாக இப்பதிவில் மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்கலாமா.? இருக்கக்கூடாதா.? என்பதை பின்வருமாறு கொடுத்த்துள்ளோம். எனவே, பதிவினை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
மாதவிடாய் காலத்தில் சஷ்டி விரதம் இருக்கலாமா.? இருக்கக்கூடாதா.?
கந்த சஷ்டி விரதம் 7 நாட்களும் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்.!
அதேபோல், கந்த சஷ்டி விரதம் கடைசி நாளான 7 ஆம் நாள், 1 டம்ளர் பால் காய்ச்சி, முருகனை நினைத்து குடித்து விரதத்தினை நிறைவு செய்யலாம். மாதவிடாய் காலம் முடிந்ததும், முருகன் கோவிலுக்கு சென்று, என்னால் முழுமையாக உன்னை வணங்கி வழிபட முடியவில்லை. அடுத்த வருடம், நான் முழுமையாக விரதம் இருந்து உன்னை தரிசித்து வழிபடுகிறேன் என்று கூறி விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். முருகன் பார்த்துக்கொள்வார்.
அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலானது மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும். இதனால், விரதம் இருக்க நினைக்கும் பெண்கள் அதிக நீரையும், பால் பழங்களையும் உட்கொள்வது மிகவும் அவசியம். உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளவர்கள், சிறிய அளவிலான உணவினை உட்கொண்டு விரதம் இருக்கலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |