Nadupalani Dandayuthapani Murugan Kovil Perukkaranai Tamil Nadu | நடுபழனி முருகன் கோவில்
முருகப்பெருமான் பலருக்கும் பிடித்த கடவுளாக இருக்கிறார். நமக்கு தெரிந்தது என்னமோ அறுபடை கோவில்கள் மற்றும் நமது ஊரில் உள்ள முருகன் கோவில்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நடுப்பழனி கோவிலை பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த கோவில் ஆனது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்காவில் அச்சரப்பாக்கத்தின் அருகில் உள்ளது பெருங்கரணை கிராமம். இங்கு 10 அழகிய ஆலமரங்களுக்கு இடையே கனகமலை எனும் நடுபழனி மலை அமைந்துள்ளது. அதன் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயரத்தில், அற்புதமான முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார். இந்த கோவிலை இன்னும் பல தகவல்களை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
நடுபழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் வரலாறு:
பொள்ளாச்சி என்ற ஊரை சார்ந்து முத்துசாமி என்பவர் 70 ஆண்டுகளுக்கு முன்பு முருகப்பெருமானின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து விட்டு பெரும்பேர் கண்டிகை என்று திருப்புகழ் தளத்திற்கு வந்தார். மலையின் மீது 4 ஆண்டுகளுக்கு தவமிருந்தார். இப்படி தவம் இருக்கும் போது முருகப்பெருமான் குழந்தை வடிவில் கனவில் வந்து பெருங்கரணையில் உள்ள மலையில் எனக்கு ஒரு மலை எழுப்ப வேண்டும் என்று கூறினார்.
அதன் பிறகு பெருங்கரணையில் உள்ள மலைக்கு சென்று இதன் உச்சியில் வேல் ஒன்றை பதித்தார். இதனை வைத்து வழிபாடும் செய்தார். நாளடைவில் முருகன் சிலையை வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபாடு செய்தார். இந்த விஷயத்திற்கு ஊர் பொதுமக்களும் பக்க பலமாகஇருந்தார்கள்.
ஒரு நாள் கனமழையால் கொட்டகை விழுந்து விட்டது. இதன் மூலம் தனியாக ஆலயம் அமைக்க வேண்டும் என்று நினைத்து சிறிய ஆரியத்தை கட்டினார். அதன் பிறகு இந்த மலைகளை சரி செய்வதற்கு முத்துசுவாமி சித்தர் கஷ்டப்பட்டுள்ளார். பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு காவடி எடுப்பவர்கள், பால் குடம் எடுப்பவர்கள் தரும் அரிசியை வைத்து மலையை சரி செய்யும் ஆட்களுக்கு சமைத்து கொடுப்பார். பக்தர்கள் தரும் காணிக்கையை கோவில் கட்டுவதற்கு பயன்படுத்தினார்கள். இப்படி இவரின் கடின உழைப்பால் 50 ஆண்டுகால உழைப்பில் உருவானதே இத்தலம்.
இந்த நேரத்தில் காஞ்சி பெரியவர் ஒரு முறை இந்த கோவிலுக்கு வந்தார். இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமான் பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர, இந்தத் தலத்தை ‘நடு பழனி’ என்று அழைத்தார். அதன்பிறகு, முருகப்பெருமானின் மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து, புதிய தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்து, 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குழந்தை வரம் தரும் பழனி முருகன் கோவில் தங்கத்தேர் வழிபாடு
ஆலய அமைப்பு:
நடுப்பழனி முருகன் கோவில் ஆனது பெருங்கருணை கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த மலையானது 300 அடி உயரமுள்ளது. 128 படிகள் உள்ளது. மேற்கு திசையில் வாகனங்கள் மலையேறும் சாலை வசதியும் இருக்கிறது. முருக பெருமான் 45 அடி உயரத்திற்கு கிழக்கு திசை பார்த்தவாறு காட்சியளிக்கிறார்.
ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை, சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்:
திருமணம் அமையவில்லை என்பவர்கள் இந்த தளத்திற்கு வருவதால் திருமண வரன் கைகூடும். குழந்தை வரன் இல்லாதவர்களுக்கு இந்த தளத்திற்கு வந்துமனமுறுக்கி வேண்டினால் குழந்தை வரன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 6 செவ்வாய்க்கிழமை விரதம் கடைபிடிப்பவர்களுக்கு பலன்கள் அதிகமாக கிடைக்கிறது.
விழாக்கள்:
இந்த கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா ஆனது மூன்று நாட்கள் நடைபெறும். சஷ்டி உற்சவம் மற்றும் திருக்கலயாணம், கார்த்திகை போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.
கோவில் நேரம்:
இந்த கோவில் தினமும் காலை 07.30 மணி முதல் மதியம் 12 மணி வரை அதன் பிறகு 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தரிசனம் செய்யலாம்.
இந்த கோவில், காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகாவின் பெருங்கரணை கிராமத்தில் உள்ள ஒரு சிறிய மலை நடுபழனியில் அமைந்துள்ளது. மேல்மருவத்தூரின் தெற்குப்புறமாக சுமார் 2 கி.மீ. தொலைவில் இடதுபுறத்தில் முருகன் கோவிலுக்கான சாலை மடங்குகிறது. அந்தச் சாலையில் சென்றவுடன் ரெயில் கிராசிங் ஒன்றை கடந்த பின்னர் சுமார் 5 கி.மீ. தூரத்தில் இக்கோவில் காணப்படுகிறது
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |