வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நவமி அன்று இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!

Updated On: December 16, 2025 6:27 PM
Follow Us:
Navami Andru Seiya Koodathavai
---Advertisement---
Advertisement

Navami Andru Seiya Koodathavai

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக நவமி அன்று என்ன செய்ய கூடாது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இந்து சமயத்தில் ஒவ்வொரு விஷயங்களையும் நல்ல நாள், நல்ல நேரம் என்று பார்த்து பார்த்து தான் செய்வார்கள். அப்படி பார்க்கும் விஷயங்களில் இதுவும் ஓன்று. அதாவது, அஷ்டமி, நவமி மற்றும் பஞ்சமி என்ற திதிகளும் ஒன்று. இந்த மாதிரி அஷ்டமி நவமியில் சில எந்த விஷயங்களையும் செய்ய மாட்டார்கள். ஆகவே நாம் இன்று நம் பதிவின் வாயிலாக நவமி திதி என்றால் என்ன..? நவமி திதியில் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

எந்த திதியில் என்ன செய்யலாம்

நவமி திதி என்றால் என்ன..? 

துர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?  தெரிஞ்சிக்கோங்க... | why did goddess durga kill mahishasura - Tamil BoldSky

பொதுவாக ஆன்மீகத்தில் நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது.

இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அதாவது நவமி திதி என்று சொல்லப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் ஒன்பதாவது திதி தான் நவமி ஆகும்.

அதாவது நவ என்றால் ஒன்பது என்று அர்த்தமாகும். இது ஒரு வடமொழி சொல்லாகும்.  அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அதுபோல அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில பட்ச நவமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் நவமி தினத்தை கிருஷ்ண பட்ச நவமி என்றும் அழைக்கபடுகிறது.

அஷ்டமி, நவமி, அமாவாசை போன்றவை நல்ல நாட்களா.. கெட்ட நாட்களா..

நவமியின் சிறப்புகள்:

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் ராம அவதாரம் மிக சிறப்பான அவதாரமாக கருதப்படுகிறது. அப்படி இராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் ‘இராம நவமி’ என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நவமி அன்று செய்ய கூடாதவை:

பொதுவாக இராமபிரான் நவமி அன்று தான் அவதரித்தார். அப்படி சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால் தான் நடந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த காரணத்தினால் தான் நவமி, திதிகளில் சுப காரியங்கள், திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்ற நல்ல செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று நம்  முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அதுபோல நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

உதாரணமாக அடுத்தவரை தாக்குவது, பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் மனதில் எழும் வாய்ப்புகள் அதிகம். எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். மேலும், வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நவமியில் என்ன செய்யலாம்:

நவமி திதியானது தெய்வ செயல்கள் செய்வதற்கு ஏற்ற நாட்களாக இருக்கிறது. மேலும் இந்த நாட்களில் உங்களுக்கு தொழில் ரீதியாகவோ அல்லது கல்வி ரீதியாகவோ போட்டியாளர்கள் இருந்தால் அவர்களை நீங்கள் வென்று விட வேண்டும் என்று நினைபபீர்கள். அதற்கு உகந்த நாட்களாக நவமி திதியானது இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நாளில் நீங்கள் சரஸ்வதி தேவியை வழிபட்டு எந்த செயல் செய்தாலும் அவை வெற்றியில் வந்து முடியும்.

அஷ்டமி அன்று இந்த தவறை செய்து விடாதீர்கள்.. அதேபோல் இதை செய்தால் நன்மை உண்டாகும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now