வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நவராத்திரி பண்டிகை உருவான வரலாறு / புராண கதை

Updated On: October 1, 2024 4:16 PM
Follow Us:
navratri mythology story in tamil
---Advertisement---
Advertisement

நவராத்திரி வரலாறு | Navarathri Story in Tamil

இந்திய மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் விழாகளில் ஒன்று நவராத்திரி. மக்களை கொடுமை செய்து வந்த மகிசாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து வெற்றியடைந்த விழாவினை தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி விழாவானது 9 நாள் தொடர்ச்சியாக அம்மனுடைய உருவங்களை வைத்து வழிபாடு செய்வதாகும்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை மகா நவராத்திரி என்று அழைக்கின்றனர். அன்னை சக்தி தேவியின் சிறப்பையும், வீரத்தையும் பாராட்டும் வகையில் இந்த நவராத்திரி விழா இந்திய மக்களால் சிறப்பாக 9 நாள் கொண்டாடப்படுகிறது. அன்னையின் சிறப்பை விளக்கும் புராண கதையையும் நவராத்திரி கொண்டாடுவதற்கான காரணங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

நவராத்திரி பண்டிகை உருவான கதை:

நவராத்திரி பண்டிகை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் 3 நாட்கள் அம்பாளுக்கு உரித்தானது. அதாவது முதல் 3 நாட்கள் மாஹேஸ்வரி, கெளமாரி,வாராஹி என்ற பெயர்களில் அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்.

அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமிக்கு உரித்தான நாட்கள். அன்றைய நாட்களில்  மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி பெயர்களில் மகாலட்சுமிக்கு பூஜைகள் நடத்தப்படும்.

நவராத்திரி வாழ்த்துக்கள் 2024

புராண கதை:

  • முன் ஒரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அனைத்திலும் சிறந்து விளங்கினார் வரமுனி முனிவர். அவருக்கு நிகர் அவர்தான் என்னும் தலைக்கனம் அவருக்கு ஏற்பட்டது.
  • அவரின் தலைக்கனம் மற்ற முனிவர்களை துச்சமாக மதிக்க செய்தது. அதன் விளைவாக ஒரு முறை அகத்தியரிடம் எருமை உருவத்துடன் அவ மரியாதையுடன் நடந்துகொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர் அவரை எருமையாக இருப்பாய் என்று சாபமிட்டனர்.
  • ரம்பன் என்ற அசுரன் தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை போற்றி முன் தோன்றினார் அக்னி பகவான். ரம்பன், அக்னி பகவானிடம், தனக்கு சர்வ வல்லமை பெற்ற மகன் வேண்டும் என வேண்டினான்.
  • ரம்பன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ விரும்பும் பெண்ணின் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.
  • எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் ரம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதாவது வரமுனி அரக்கிக்கும் ரம்பன் என்பவனுக்கும் மகனாக பிறந்தான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.
  • இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது, என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.
  • இதன்பின் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.
  • தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.
  • அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்பாளை வணங்கி வழிபட்டது அஷ்டமிக்கு அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று. இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now