நம்மை காத்து அருளும் ஐயப்பனின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்..!

Advertisement

Pallikattu Sabarimalaikku Song Lyrics in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான கஷ்டங்கள் ஏற்படும். அவ்வற்றையெல்லாம் நாம் கடந்து வர நமது மனதில் அதிக அளவு நம்பிக்கை தேவைப்படுகிறது. அப்படி நமக்கு தேவைப்படும் தன்னம்பிக்கையை நமக்கு அளிப்பது நமது மனதில் உள்ள கடவுள் நம்பிக்கை தான். அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளின் மீது நம்பிக்கை உண்டு. அப்படி நம்மில் பலரின் மனதிலும் இடப்பிடித்துள்ள கடவுள்களில் ஒருவர் தான் ஐயப்பன்.

இவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது மிக மிக எளிமையான ஒன்றாகும். அதாவது இவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும் அப்படி நாம் பூஜை செய்யும் பொழுது நாம் அவரின் ஸ்லோகம், சரணம் போன்றவற்றை கூற வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் ஐயப்பனின் பெருமைகளை கூறும் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து ஐயப்பனின் முழு ஆசீர்வாதத்தையும் பெற்று மகிழுங்கள்.

Pallikattu Sabarimalaikku Lyrics in Tamil

Pallikattu Sabarimalaikku Lyrics in Tamil

இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!

நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து

அனைத்து கஷ்டங்களையும் போக்கும் ஐயப்பனின் ஸ்லோகம்

பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் Pdf

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement