வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் தடையில்லா பண வரவுக்கு வெள்ளிக்கிழமையில் ஏலக்காயை இப்படி பயன்படுத்துங்க..!

Updated On: July 5, 2023 6:53 AM
Follow Us:
panam sera enna seiya vendum
---Advertisement---
Advertisement

Pana Varavu Athikarikka

வீட்டில் மாலை நேரத்தில் பூஜை அறையில் நாம் தினம் தோறும் கடவுளை வழிபடுவோம். இவ்வாறு நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கள் தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை. இத்தகைய முறையில் நாம் செய்தால் வீட்டில் பண கஷ்டங்கள் நீங்கி பண வரவு அதிகரிக்காது. ஏனென்றால் இதுபோன்ற காரியங்களுக்கு ஆன்மீகத்தில் என்று நிறைய பரிகாரங்கள் மற்றும் மந்திரங்கள் என்று உள்ளது. அதனால் இன்று ஏலக்காயினை வைத்து கூறக்கூடிய ஒரு தாந்த்ரீக மந்திரத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

வீட்டில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க கல் உப்பு மட்டும் போதும்

பண வரவு அதிகரிக்க தாந்த்ரீகம்:

பண வரவு அதிகரிக்க ஏலக்காயினை வைத்து செய்யக்கூடிய இந்த தாந்த்ரீகத்தை முதல் முதலில் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் தான் முதல் முதலில் செய்ய வேண்டும்.

மேலும் இந்த தாந்த்ரீகத்தை அதிகாலை 03:00 AM மணி முதல் 10:00 AM மணி வரை அல்லது மாலை 06:00 PM முதல் 09:00 PM நேரத்தில் செய்ய வேண்டும்.

  1. ஏலக்காய்- 33
  2. பச்சை நிற துணி- 1

தாந்த்ரீகம் செய்யும் முறை:

ஏலக்காய் தாந்த்ரீகம்

முதலில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அதன் பிறகு தரையில் ஒரு விரிப்பினை விரித்து வடக்கு திசையை நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது 3 ஏலக்காயினை எடுத்து வைத்து விடுங்கள்.

அடுத்து உங்களின் வலது உள்ளங்கையில் 3 ஏலக்காயினை வைத்து கொண்டு ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி குபேராய நமஹ என்ற மந்திரத்தை மஹாலக்ஷ்மி அம்மனை நினைத்து கொண்டு 108 முறை கூற வேண்டும். இதேபோல் தொடர்ச்சியாக 11 நாட்கள் கூற வேண்டும். 11 நாட்களும் வெவ்வேறு ஏலக்காய் தான் பயன்படுத்த வேண்டும்.

இந்த தாந்த்ரீகத்தை செய்து முடித்தவுடன் தினமும் அந்த ஏலக்காயினை ஒரு மூடி போட்ட டப்பாவில் வைத்து கொள்ளுங்கள். கடைசியாக 11 நாட்கள் கழித்தவுடன் ஒரு பச்சை நிற துணியில் தாந்த்ரீகம் செய்த மொத்த ஏலக்காயினையும் அதில் சேர்த்து நன்றாக கட்டி கொள்ளுங்கள். பின்பு இந்த ஏலக்காய் மூட்டையினை பண வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விடுங்கள்.

மேலும் 3 மாதத்திற்கு பிறகு இந்த தாந்த்ரீக மூட்டையினை நீர் நிலைகளில் போட்டு விடுங்கள். இவ்வாறு செய்து முடித்த கையோடு பண வரவு அதிகரிப்பதற்கான முயற்சினையும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும் 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now