பங்குனி உத்திரம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம்..!

Advertisement

Panguni Uthiram Mantra in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் பங்குனி உத்திரம் அன்று சொல்லவேண்டிய மந்திரம் பற்றி பார்க்கலாம் வாங்க. பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில், முருகன் கோவில்கள் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

பங்குனி உத்திரம் அன்று முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக இருக்கிறது. அன்றைய தினத்தில் கோவிலில் நடக்கும் அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கி கொடுத்து வழிப்படுவதன் மூலம், நற்பலன்களை பெறலாம். ஓகே வாருங்கள், பங்குனி உத்திரம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.

பங்குனி உத்திரம் வரலாறு

பங்குனி உத்திரம் மந்திரம்:

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் அன்று முருகனுக்கு உகந்த மந்திரமான ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மேலும், கிழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் பங்குனி உத்திரம் அன்று உச்சரிக்க வேண்டும்.

படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து சுப காரியங்களும் கைகூடும். உடல் நலம் நன்றாக இருக்கும். நினைத்தது நடக்கும். பங்குனி உத்திரம் அன்று தான் பெரும்பாலான தெய்வங்களுக்கு திருமணம் நடந்தது என்று புராண கதைகள் கூறுகிறது. அதாவது, சிவன்- பார்வதி, ராமர்- சீதைக்கும் மற்றும் முருகன் – தெய்வானைக்கும், பெருமாள் –மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது.

இந்நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து, முருகப்பெருமானுக்கு உகந்த நெய் வேத்தியங்களை படைத்து, திருமுருகாற்றுப்படை மற்றும் கந்த சஷ்டி கவசம் போன்ற பதிகங்களை படித்து வழிபடுவதன் மூலம், நற்பலன்களை பெறலாம். முக்கியமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். பெண்கள், இன்றைய தினத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம், மனதில் நினைத்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

பொதுவாக, பௌர்ணமி நாளில் இறைவனை வழிபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். அதிலும், பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இறைவனை வழிபடும்போது, இன்னும் அதிகமான பலன்களை பெறலாம்.

பங்குனி உத்திரம் அன்று நினைத்து நடக்க இந்த விரதத்தை கடைபிடிக்கவும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement