பித்ரு தோஷம்
ஆன்மீகத்தில் ஒருவருடைய வாழ்க்கை ஆனது நன்றாக இருக்க வேண்டுமென்றால் எப்படி நேரம்,காலம் முக்கியமோ அதே போல தான் முன்னோர்களின் ஆசீர்வாதமும் வேண்டும். நாளை ஆடி அமாவாசை வருகின்ற நிலையில் அவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்வது அவசியமானது. முன்னோர்கள் உங்களை ஆசிர்வதிக்கவில்லை என்றால் நீங்கள் வாழ்க்கையில் கஷ்டப்படுவீர்கள். அவர்கள் எங்களை ஆசிர்வதிக்கவில்லை என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்றால் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். அவை என்னென்ன அறிகுறிகள் என்று அறிந்து கொள்வோம்.
Pitru Dosha Symptoms in Tamil
பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும். திடீரென்று பண இழப்பு ஏற்படும். பணத்தை சேமிக்க முடியாத நிலை இருக்கும். பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் கூட அந்த பணத்திற்கு செலவு வந்துவிடும்.
உணவில் அடிக்கடி முடி வந்து கொண்டே இருக்கும். இது போல உங்கள் வீட்டில் முடி அடிக்கடி வந்தால் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்று அர்த்தம். உங்களின் முன்னோர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்பதையும் குறிக்கிறது.
முன்னோர்களை கனவில் காண்பது நல்லது தான். அதே நேரத்தில் எந்த விதமாக கனவில் வருகிறார் என்பதை பொறுத்து அதனுடைய பலன் ஆனது மாறுபடும். முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டால் எந்த பிரச்சனையும் இல்லை, அதே நேரம் முன்னோர்கள் அழுத நிலையிலோ, வருத்தத்துடன் பேசினாலும் அவர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் பல வகையான வாசனைகள் வரும் தான். ஆனால் சில நேரத்தில் என்ன வாசனை என்றே தெரியாத அளவிற்கு வாசனை வந்தால் அவை முன்னோர்கள் வருத்தமாக இருப்பது குறிக்கிறது. இந்த வாசனை ஆனது அடிக்கடி வந்தால் உங்கல் முன்னோர் கோபமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் ஏதாவது புதிய வேலை செய்ய நினைத்தாள் அதனை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதே போல செய்து கொண்டிருக்கின்ற வேலையிலும் தடை ஏற்படும். இது போல காரிய தடை வந்தால் முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆடி அமாவாசை விரதம் யாரெல்லாம் இருக்கலாம், யார் இருக்க கூடாது
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












