வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பிரதமை திதியில் என்ன செய்யக்கூடாது.? | What Not To Do on Prathama Tithi in Tamil

Updated On: February 26, 2025 6:24 PM
Follow Us:
Prathama Tithiyil Enna Seiya Koodathu
---Advertisement---
Advertisement

பிரதமையில் என்ன செய்யக்கூடாது.? | Prathamai Tithi Enna Seiyakoodathu

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிரதமையில் என்ன செய்யக்கூடாது.? பிரதமை திதி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் முதல் நாளாக வருவதால் இந்த நாள் பிரதமை என்று அழைக்கப்படுகிறது.

ஜோதிடத்தின்படி பிரதமை திதியில் சில விஷயங்களை செய்ய கூடாது என்று கூறப்படுகிறது. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். அதாவது. இப்பதிவின் வாயிலாக பிரதமை அன்று செய்ய கூடாதவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை  பிரதமை  என்று கூறுவார்கள். சந்திரன் குன்றி காணப்படுவதால் அந்நாளின் செய்யப்படும் காரியங்களும் வளர்ச்சி இல்லாமல் இருக்கும் என பிரதமை திதியில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள்.

பிரதமை திதி பலன்கள்

பிரதமை அன்று செய்ய கூடாதவை:

பிரதமை அன்று செய்ய கூடாதவை

திதிகளில் முதல் திதி என்றால் பெருமையை பிரதமை திதி பெரும். இதனை பெரும்பாலானவர்களுக்கு பாட்டி முகம் என்று சொன்னால் தான் தெரியும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு மறுநாள் வரக்கூடியதும் அமாவாசைக்கு மறுநாள் வரக்கூடியதும் தான் இந்த பிரதமை திதி. இந்த பிரதமை திதியை கிராமங்களில் பாட்டிமுகம், பாட்டியம் என்றெல்லாம் கூறுவார்கள். பெரும்பாலும் நம் வீட்டில் உள்ளவர்கள், இன்று பாட்டிமுகமாக இருக்கிறது. அதனால், இந்த சுப நிகழ்ச்சியை செய்ய வேண்டாம் என்று சொல்லி கூறியிருப்போம்.

ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால், அன்றைய நாளில் சந்திரனின் ஒளி குன்றி காணப்படும். அதாவது ஒளியானது குறைவாக இருக்கும். இப்படி இருப்பின் நாம் இந்நாளில் தொடங்கும் காரியமும் குறைந்துகொண்டே இருக்குமே தவிர அதிகமானது. அதனால்,  பிரதமை திதியில் எந்தவொரு சுப காரியங்களையும் செய்ய கூடாது. மேலும், பிரதமையில் புதிய செயல்கள் எதுவும் செய்ய கூடாது மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள கூடாது.    புதிய தொழில், வீடு கட்டுதல், திருமணம், காதுகுத்துதல் இப்படி எந்தவிதமான சுபகாரிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்நாளில் செய்யாதீங்க. அதேபோல், முன்னோர்களுக்கான தர்ப்பணம் கொடுத்தல் போன்ற விஷயங்களை பிரதமை நாளில் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை, பிரதமை திதியில் நீண்ட நேரம் பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்ற செயல்களும் இன்றைய நாள் செய்யக்கூடாது.  

பிரதமை திதிக்கான சூன்ய ராசிகள்:

பிரதமை திதிக்கான சூன்ய ராசிகள் துலாம் மற்றும் மகரம் ஆகும்.

எந்த திதியில் என்ன செய்யலாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now